20 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை தமிழ் மீனவர்களுக்கு மீன்பிடிக்கும் உரிமை கிடைத்திருப்பதாகவும், தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அவர்களும் போராடுகின்றனர் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இரண்டு தரப்பிலும் தமிழ் மீனவர்கள் கஷ்டப்படக் கூடியதை தடுக்கக் கூடிய வகையில், இருதரப்பாருக்கும் இடையில் சுமூகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறிது காலத்திற்கு கைதாகாத வகையில் மீன்பிடித் தொழிலை செய்வோம். அந்தக் காலக்கட்டத்திற்குள்ளாக பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி நடத்தி முடிப்போம் என்றார்.
-http://www.nakkheeran.in