இலங்கை கடற்படையினரால் வாழ்வாதாரம் பாதிப்பு : மீனவர்கள் கவலை

fishermen_bort_001கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து நேற்று காலை 600க்கும் மேற்பட்ட படகுகளில் 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை படையினர், மீனவர்கள் மீது கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் துப்பாக்கியை காட்டியும் மீனவர்களை மிரட்டிய இலங்கை கடற்படையினர் படகுகளையும் சேதப்படுத்தியதால் உயிருக்கு பயந்து மீனவர்கள் கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினரால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ள மீனவர்கள், மத்திய அரசு இதற்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்துள்ளனர். பலர் வாழ்வாதார பிரச்சனையால் வேறு தொழிலுக்கு சென்று விட்டதாக கவலை தெரிவித்துள்ள மீனவர்கள், தங்களின் பாரம்பரிய தொழிலை காக்க சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

-http://www.nakkheeran.in

TAGS: