தம்பி “சீமானுக்கு” இருக்கும் தன்னம்பிக்கையே அவரை ஆட்சியில் அமரச்செய்யும்

லோக நாதன்'s photo.

ஏகப்பட்டவர்களுக்கு,வயிற்றில் புளியை கரைக்கும் சம்பவம் ஒன்று சத்தமில்லாமல் அரங்கேறியுள்ளது,கடலூரில் இன்று. எவ்வளவு தன்னம்பிக்கையும், துணிச்சலும் தேவை ? 234 வேட்பாளர் அறிமுகவிழா. இதற்க்கு தமிழன் என்கின்ற உணர்வும், ஒற்றுமையும்,இருந்தால் மட்டும் போதாது. நான் தமிழன் என்கிற திமிரும் கொஞ்சம் இருந்தால்தான்….இப்படி ஓர் தேதர்தலில் தனித்து போட்டியிட்டு வெல்வோம் என்று உறுதிபட கூறலாம். தம்பி “சீமானுக்கு” இருக்கும் தன்னம்பிக்கையே அவரை ஆட்சியில் அமரச்செய்யும். தன்மீது தனக்கிருக்கும் நம்பிக்கையே !ஆளுமையின் உச்சம்.

“முயற்சி எனும் ஏணிகொண்டு ,முழுமையான யுக்திகொண்டு எண்ணிப் பறிக்க நினைத்தால்
எட்டாப் பழமென்று எதுவுமில்லை..! இலைகளை உதிர்த்த மரம் கூட நிமிர்ந்து நிற்கிறது — நாளை வசந்தகாலம் வரும் என்ற நம்பிக்கையோடு !
ஆனால் மனிதா நீ மட்டும் ஏன் சோர்ந்து போகிறாய் ! துணிவுடன் களமிறங்கு !
வெற்றி உன் காலடி ! நல்லதோர் ஆட்சி நாளை மலரும் ! ”

நேரடியாக வேட்பாளர் அறிமுகவிழா காணவில்லை என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் அதனையும் முகநூல் நண்பர்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, அகற்றிவிட்டார்கள்.

அனைத்து திராவிடக் கட்சிகளும் குலைநடுங்கிப் போயுள்ளனர், அதனால்தான்….அனைத்து தொலைக்காட்சிகளையும் விலைகொடுத்து தடுத்துள்ளார்கள். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதை அறியாதவர்கள்.

தனி தமிழர் நாடு/www.facebook.com

TAGS: