தமிழரை தலைமையாக கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: இதுவே தமிழின விடுதலையின் முதல் படி!

naam tamilarதமிழரை தலைமையாக கொண்டுள்ள கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுபட வேண்டும்: இதுவே தமிழின விடுதலையின் முதல் படி!

நாம் தமிழர் இணையத்திலும் மேடை பேச்சிலும்,ஊடகத்திலுமே முன்னேற்றம் கண்டுள்ளது களத்தில் தொய்வே,
களத்தில் நாம் தமிழரின் ஒவ்வொரு தொகுதி களப்பிரச்சாரத்தில் எண்ணிக்கையில் குறைந்த அளவு மக்களையே காண முடிகிறது,

இங்கு இணையத்தில் பேசப்படுவதை போல நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்பது களத்தில் கானல் நீரே,

குறைந்தபட்சம் சில தொகுதிகளையாவது கணக்கெடுத்து அங்கு மக்களோடு மக்களாக கலந்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனை நடைமுறைச் சிக்கலை ஆராய்ந்து அதை தீர்ப்பதற்கான உறுதியை கொடுக்கனும்,

பாமக மாவட்ட ஒன்றிய செயலாளர்களை முடுக்கிவிட வேண்டும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மற்ற நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்,

மாற்றம் முன்னேற்றத்தின் முதல் படியாக மது ஒழிப்பின் அவசியத்தை மக்களின் மனதில் ஆழமாக பதிய வைக்கனும்,

இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் இவ்விருக்கட்சிகளும் தங்களுக்குள் குறைந்தபட்ச கொள்கையை பொதுவாக வரையறுத்து ஒன்றினைந்து களமாடலாம்,

வீம்புக்கு பேசி 2016 தேர்தலோடு மக்களின் எழுச்சி என்பது மாயையே என்று மழுங்கடிக்க துணைபோகாதீர்,

கட்டாயமாக ஒரு கூட்டமைப்பை உருவாக்கியே ஆகனும், அதுதான் இளைஞர்களிடமும் மக்களிடமும் உங்கள் மீதான பார்வை ஒரு நம்பிக்கையை கொடுக்க வழிவகுக்கும்,

அதோடில்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள மற்ற தமிழ்த்தேசிய இதர அமைப்புகளின் ஆதரவை பகிரங்கமாக கோர வேண்டும்,

உங்களின் அனைத்துவிதமான முரண்பாடுகளையும் இத்தேர்தலில் ஒதுக்கிட்டு நம்மவர்களின் நலனுக்காக ஒன்றினைந்து களமாட வேண்டும்.

–Velmurugan Ramalingam

http://senkettru.com/…/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B…/

TAGS: