இலங்கை – இந்தியாவுக்கு இடையில் பாலம்! உடன்படிக்கையை இறுதிப்படுத்த நடவடிக்கை

ramarpaalamஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் பாலம் அமைக்கும் உடன்படிக்கை விரைவில் இறுதி செய்யப்படும் என்று மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிட்டின் கட்காரி தெரிவித்துள்ளார்

நேற்று திங்கட்கிழமை, புதுடில்லியில் வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டம் தற்போதைக்கு பரிசீலனையில் இருக்கிறது. எனினும் இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலவுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியும் இந்த திட்டத்தை அங்கீகரித்திருப்பதால், இலங்கையில் திட்டத்தில் அக்கறை கொண்டிருப்பதாக கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: