மீனவர்களை கடத்தும் இலங்கை கடற்படையினர்! தமிழக முதல்வர் குற்றச்சாட்டு

jayalalitha2இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்வதாக ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 5ம் திகதியன்று இலங்கையின் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பிலேயே ஜெயலலிதா இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.

இந்தநிலையில் கடந்த 31ம் திகதிக்கு பின்னர் இதுவரை தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 91 படகுகளும் பறிக்கப்பட்டுள்ளது.

பல தடவைகளாக இது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போதும் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கடத்திச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்வதாக ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்தப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அத்துடன் வெளியுறவு அமைச்சுக்கு இது தொடர்பில் கட்டளையை பிறப்பிக்குமாறும் அவர் கேட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: