ஜாதி மாறி காதலித்த ஜோடியை ஊர்க் கூட்டம் போட்டு “கொல்ல” முடிவடுத்த கிராமம்.. திருச்சி அருகே பகீர்!

casteதிருச்சி: ஜாதி மாறி காதலித்ததால் ஊர்க்கூட்டம் போட்டு எங்களை ஆணவக் கொலை செய்ய முடிவு செய்துள்ளனர் என்று திருச்சி போலீசில் இளம்பெண் ஒருவர் பகீர் புகார் கொடுத்த சம்பவம் அதிர வைத்துள்ளது.

திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் உமா, திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் காதலனுடன் வந்து ஒரு புகார் மனுஅளித்தார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நான் சத்திரம் பகுதியில் உள்ள கல்லூரியில் எம்.காம் முதலாமாண்டு படித்து வருகிறேன். மணிகண்டம் பள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் சத்தியராஜ் என்பவரும், நானும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எனது காதலர் வேறு சமூகம் என்பதால் இதுகுறித்து அறிந்த எனது பெற்றோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி கோவையில் உள்ள மருதமலையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். இதை அறிந்த எனது பெற்றோர் ஆணவ கொலை செய்து விடுவதாக எங்களை மிரட்டுகின்றனர். இதுகுறித்து ஊர்கூட்டம் நடத்தி எங்களை கண்டுபிடித்து கொன்று விட வேண்டும் என பேசி முடிவு செய்துள்ளனர். ஆகையால் எனது பெற்றோரிடமிருந்து எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உமா அந்த மனுவில் கூறியுள்ளார்.

என் பொண்ணு காதலித்து ஓடிப் போனால் 24 மணிநேரத்தில் செத்துடுவேன்- கவுண்டர் சங்க நிறுவனர் ரவிக்குமார்

ravikumarசேலம்: தன் மகள் யாரையாவது காதலித்து ஓடிப் போனால் 24 மணிநேரத்தில் தான் இறந்துவிடுவேன் என்று கொங்கு வெள்ளாள கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் அதிரடியாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பெண்களின் பாதுகாப்பும், ஐ.நா., ஒப்பந்தங்களும்….தமிழ்நாட்டில் செய்ய வேண்டியது என்ன?” என்ற தலைப்பில் பாமக சார்பில் சேலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தலித் சமூகத்தைத் தவிர்த்த இதர சமூகத்தின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சங்கத்தின் நிறுவனர் ரவிக்குமார் பேசியதாவது: என்னைப் பொறுத்தவரையில் காதலுக்கு நான் எதிரானவன். என் பார்வையில் காதல் என்பது விருப்பம். அதை வீட்டில் சொல்லி கல்யாணம் கட்டி தொலைய வேண்டியது தானே.

பெற்றோர்கள் சரியான பொருத்தம் என்றால் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஒரே சாதியில் காதலிப்பதை கூட ஏற்றுக்கொள்ள மாட்டேன். இது ராமதாசுக்கு பிடிக்காது. ஏனென்றால் ராமதாஸ் அவரது மாமன் மகளை காதலித்து தான் திருமணம் பண்ணியிருக்கிறார்.

என் பெண் காதலித்து இன்னொருவனோடு ஓடி விட்டால் அடுத்த 24 மணி நேரத்தில் நான் இறந்து விடுவேன். என் பெண்ணை எப்படி வளர்க்க வேண்டும் என்பது எனக்கு தெரியும். இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.

tamil.oneindia.com

TAGS: