இராணுவ வீரரின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய தீவிரவாதிகள்! எல்லையில் பதற்றம்

pakistan terrorஇந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரரை கொன்று துண்டு துண்டாக வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் உரி இராணுவ முகாமில் கடந்த 18ம் திகதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தி பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது.

இதனால் இருநாட்டுகளின் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது, ஜம்மு காஷ்மீர் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு காஷ்மீரின் குப்வாரா பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.

இதில் ராணுவ வீரர் ஒருவரை சிறைபிடித்ததுடன் மிக கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு துண்டாக வீசியுள்ளனர்.

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு வீரர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

-http://news.lankasri.com

TAGS: