என்ன டா தமிழன்னு தமிழன்னுட்டே இருக்க நான் மலையாளி டா. போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் தர மறுத்த பெண்மனி

malayaliசென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் 6 வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

கடும் பனியிலும், வெயிலிலும் இரவு பகல் பாராமல் ஜல்லிக்கட்டு போரட்டத்தில் இளைஞர்களும், மாணவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், பொது மக்களும், வணிகர்களும் தங்களால் ஆன உதவிகளை போராட்டக்காரர்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் போராட்டக் களத்தில் உள்ள இளைஞர்கள் அருகில் உள்ள கடையில் தண்ணீர் குடிப்பதற்காக வாட்டர் பாக்கெட்கள் விலைக்கு கேட்டுள்ளனர்.

அப்போது, கடை உரிமையாளரான ஒரு பெண்மனி கடையில் இரண்டு மூட்டை வாட்டர் பாக்கெட் வைத்துக் கொண்டே இல்லை என்று கூறியிருக்கிறார்.

அந்த இளைஞர் தண்ணீர் இருக்கிறதே ஏன் தர மறுக்கிறீர்கள் என கேட்டதற்கு தண்ணீர் தர முடியாது என்று கூறியதோடு, என்ன தமிழன்னு தமிழன்னுட்டே இருக்க நான் மலையாளி. அதனால் தர முடியாது என்று இளைஞரை பார்த்து கூறியிருக்கிறார்.

உலகமே இந்த அறவழிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், உள்ளூர் கடையில் தண்ணீர் தராமல் புறக்கணிக்கப்பட்டது இளைஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-manithan.com

TAGS: