ஆர்.கே நகர் தொகுதியில் வெற்றி யாருக்கு? வெளியானது மெகா சர்வே முடிவுகள்

ops8தமிழ்நாட்டின் ஆர்.கே நகரில் நடைபெறும் இடைதேர்தலில் சசிகலா கோஷ்டியை விரட்டியடிப்போம் என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ வாக தெரிவு செய்யப்பட்டார்.

அவர் மரணத்தால் அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12ஆம் திகதி இடைதேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.கே நகர் மக்கள் வாக்கு எந்த கட்சிக்கு என சமீபத்தில் மெகா சர்வே நடத்தப்பட்டது.

இதில் பெரும்பாலானோர், ஓ.பி.எஸ் அணியினர் யாரை நிற்க வைத்தாலும் அவர்களுக்கு வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.

சிலர் தீபாவுக்கு ஆதரவுக்கு தெரிவித்தாலும், அவருக்கு அரசியல் அனுபவம் இல்லை என தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சசிகலா கோஷ்டியின் டிடிவி தினகரனுக்கு தொகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினகரன் கோஷ்டியை தொகுதிக்குள் நுழைய விட மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

ஓ.பி.எஸ்க்கு தொகுதியில் பேராதரவு இருப்பதை உணர முடிகிறது

-http://news.lankasri.com

TAGS: