சுஷ்மாவை சந்திக்கிறது தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் குழு

sushma01இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை குறித்து கலந்துரையாட இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை எதிர்வரும் 21ம் திகதி சந்திக்க உள்ளதாக இராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். எமரிட் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளது.

fishermen1இலங்கை அரசாங்கம் தடுத்து வைத்துள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் 138 படகுகளையும் விடுவிக்க வெளிவிவகார அமைச்சரிடம் இதன்போது கோரிக்கை விடுக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினையை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க உள்ளதாகவும் இராமேஸ்வரம் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். எமரிட் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

-http://www.tamilwin.com

TAGS: