கர்ப்பிணி பெண்ணை துடிதுடிக்க கொலை செய்த ஜாதி வெறி பெற்றோர்

தமிழ்நாட்டில் கலப்பு திருமணம் செய்த சொந்த மகளை அவர் பெற்றோரே அடித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சர்மிளா, இவர் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி சர்மிளா அவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்துக்கு பின்னர் சர்மிளா கர்ப்பாமாகியுள்ளார், அவர் ஏழு மாத கர்ப்பமாகியிருந்த நிலையில் அவரின் கர்ப்பத்தை கலைக்க அவர் பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால் இதனை சர்மிளா ஏற்க மறுத்துள்ளார், இதனால் கோபமடைந்த அவர் பெற்றோர் அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-lankasri.com

TAGS: