பாலியல் தொல்லை: ஒரே கிராமத்தில் 80 மாணவிகள் பள்ளிப் படிப்பை நிறுத்திய கொடுமை

tollaiஇந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அதிகரிக்கும் பாலியல் தொல்லை காரணமாக ஒரே ஒரு கிராமத்தில் மட்டும் 80 மாணவிகள் பள்ளிப் படிப்பை நிறுத்தியுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் உள்ள கோதேரா தாப்பா தேகானா கிராமத்தை சேர்ந்த 80 மாணவிகள் பாலியல் தொல்லையால் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி கடந்த புதன் கிழமையில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

உண்ணாவிரதம் இருக்கும் 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் மூன்று கிலோ மீற்றர் சென்று கான்வாலியில் நாங்கள் படிக்க வேண்டியது உள்ளது. நாங்கள் செல்லும் போது பாலியல் தொல்லைக்கு ஆளாக வேண்டியதால் பயமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.

இது தொடர்பாக உள்ளூர் தலைவரிடம் மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதனை அவர் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் குறித்த புகாரால் எந்த பயனும் இல்லை.

இதனையடுத்து மாணவிகள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளனர். உண்ணாவிரதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மாணவிகள் பள்ளி செல்லும் வேளையில் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார் என கூறும் சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வரும் ஆண்கள் அவர்களிடம் தவறாக நடந்துக் கொள்கிறார்கள், இதனால் மாணவிகள் அச்சம் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதே ரேவாரி மாவட்டத்தில் கடந்த வருடம் பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவி பாலியல் பாலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து இரு கிராமங்களின் மாணவிகள் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com

TAGS: