ஓடும் ரயிலில் வெறிச்செயல்: மாட்டிறைச்சி உண்டதால் இளைஞர் அடித்துக் கொலை!

டெல்லியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக கூறி ஓடும் ரயிலில் நான்கு இளைஞர்கள் மீது அடையாளம் தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பல்லப்கிராவின் கண்டவளி கிராமத்தைச் சேர்ந்த ஜுனைத், ஹஷீம், ஷாகிர் மொசின் மற்றும் மொயின் ஆகிய நான்கு இளைஞர்களும் துக்லகாபாத்தில் இருந்து ரயிலில் சென்றுள்ளனர்.

ரமலான் திருநாளிற்காக பொருட்கள் வாங்கச் சென்ற சென்றபோது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரயில் கூட்டமாக இருந்தபோது நால்வர் மீதும் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் ரயிலில் இருந்து விரைவாக வெளியேறிவிட்டதாகவும், அதனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

-lankasri.com

TAGS: