நரபலி கொடுக்கப்பட்ட சிறுவன்?

தமிழகத்தின் வாணியம்பாடியில் சாமியார் மடம் அருகே சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி மேல்நிம்மியம் பட்டையை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் துளசி சித்தப்பா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.

அப்பகுதியில் ரவி என்ற சாமியார் மடம் வைத்திருக்கிறார், மடம் அருகே தண்ணீர் தொட்டி அமைத்து ஆமை ஒன்றை வளர்த்து வருகிறாராம்.

அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை செய்து வருவது சாமியாரின் வழக்கமாகும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துளசி காணாமல் போயுள்ளான்.

சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, தண்ணீர் தொட்டியும் மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

அருகே ஆமையும், நாணயங்களும் கிடந்துள்ளனர், இதனால் சந்தேகம் எழுந்த நிலையில் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது சிறுவன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திரகிரகணம் அன்று சிறுவனை நரபலி கொடுத்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர், சாமியாரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-lankasri.com

TAGS: