ராம் ரஹிமின் 1000 ஏக்கர் ஆசிரமத்திற்குள் 1 லட்சம் ஆதரவாளர்கள்.. அதிரடியாக உள்ளே நுழைந்தது ராணுவம்

gurmeetramrahimsingh1-26-1503731403சிர்சா: பலாத்கார வழக்கில் தேரா சச்சா அமைப்பின் தலைவர் குர்மித் ராம் ரஹிம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஹரியானாவில் கலவரம் வெடித்துள்ளது. பல இடங்களில் 144 தடை உத்தரவு நிலவுகிறது.

சிர்சா மாவட்டத்தில் ராம் ரஹிமின் தலைமை ஆசிரமம் உள்ளது. அங்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். ஆண், பெண், குழந்தைகளும் இதில் உண்டு. அவர்களை வெளியேற்றுவதற்காக ராணுவ வீரர்கள் அந்த ஆசிரமத்திற்குள் நுழைந்தனர். துணை ராணுவ படை வீரர்களும், அதி விரைவுப்படை போலீசாரும் ஆசிரமத்திற்குள் சென்றுள்ளனர்.

ஆசிரமத்தை படிப்படியாக கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். மொத்தம் 1000 ஏக்கர் பரப்புடன், உள்ளேயே பள்ளி, விளையாட்டு கிராமம், திரையரங்கு, மருத்துவமனை போன்றவை கொண்ட டவுன்ஷிப்தான் இந்த ஆசிரமம் என்பது குறிப்பிடத்தக்கது.

-oneindia.com

TAGS: