இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மீன்துறையினரின் அனுமதியுடன் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நெடுந்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அந்த வழியாக குட்டிக்கப்பல்களில் இலங்கை கடற்படையினர் ரோந்து வந்தனர்.

அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்தனர். சில படகுகளில் இருந்த மீன் கள் மற்றும் மீன்பிடி சாதனங் களை கடலில் வீசி எறிந்தனர்.

மேலும் தங்கச்சிமடம் சார்லஸ் என்பவரது படகையும் அதில் இருந்த பாண்டி(வயது 35), ரெம்ஜித் (45), ஜார்ஜ் (27), ரோமியோ(30), முருகன்(40) ஆகிய 5 மீனவர்களையும் சிறைபிடித்துச் சென்றனர்.

இவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பிறகு ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், நீதிபதி உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

-dailythanthi.com

TAGS: