காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்.. பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 6 பேர்வரை இதில் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள்.

காஷ்மீர் அருகே இருக்கும் சுஞ்வான் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. நேற்று அதிகாலை தீவிரவாதிகள் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

இந்த தாக்குதல் நேற்று காலை ஆரம்பித்து நேற்று மதியம் வரை தீவிரமாக நடந்தது. அதன்பின் மீண்டும் இந்திய ராணுவம் திரும்பி தாக்கியது. இந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இப்போதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இதில் காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்

tamil.oneindia.com

TAGS: