இந்துக்கள் 5 குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் சிறுபான்மையினராகிவிடுவீர்- பாஜக எம்எல்ஏ

லக்னோ: குழந்தைகள் என்பது கடவுளின் பிரசாதமாகும். எனவே இந்துக்கள் 5 குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் பேசினார்.

இதுகுறித்து சுரேந்திர சிங் கூறுகையில், இந்துத்துவா நிலைத்திருக்க இந்துக்கள் அனைவரும் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். குழந்தைகளை பெற்றுக் கொள்வது என்பது கடவுள் அளித்த வரமாகும்.

இந்துக்கள் வலிமையாக இருந்தால் இந்தியா வலிமையாக இருக்கும். ஒரு வேளை இந்துக்கள் வலிமை இழந்திருந்தால் இந்தியாவும் வலிமை இல்லாமல் இருக்கும். மக்கள் தொகையில் கவனம் செலுத்தாவிட்டால் இந்துக்கள் சிறுபான்மையினராகிவிடுவோம்.

இந்துக்கள் சிறுபான்மையினராவது பயங்கரவாதிகளால் அல்ல அவர்களாலேயே ஆகும் . இந்துக்கள் தொடர்ந்து பெரும்பான்மையினராக இருக்க வேண்டும் என்றால் 5 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எம்எல்ஏ பேசினார். இந்து கடவுள் ராமரால் கூட பாலியல் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியாது என்று கூறியவர்தான் இந்த சுரேந்திர சிங்.

tamil.oneindia.com

TAGS: