சபரிமலை கோவிலுக்கு சென்ற மாடல் அழகிக்கு இப்படியொரு நிலையா!

திருவனந்தபுரம்: மேலும், பெண்கள் தர்பூசணிப் பழம் விற்பவர்களைப்போல் தங்களது உடல் அழகை பகிரங்கமாக வெளிகாட்ட விரும்புகின்றனர் என்று ஒருவர் விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நிர்வாணக் கோலத்தில் தர்பூசணி பழத்தின் வெட்டிய பாகத்தால் தனது மார்பழகை மறைத்தபடி படம்பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதன் மூலம் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து அங்கு சென்ற சில பெண்களில் ரெஹானா பாத்திமாவும் ஒருவர்.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கான எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19-ம் தேதி ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார்.

கேரள மந்திரியின் உத்தரவையடுத்து அவரை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்த சம்பவத்தின் மூலம் தொடர்ந்து செய்திகளில் விவாதப்பொருளாக ஆகிப்போன ரெஹானா மற்றும் அவரது குடும்பத்தினரை கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தள்ளிவைத்துள்ளது.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜி ஏ.பூக்குன்ஜு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முயன்றதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளையும், சடங்கு, சம்பிரதாயங்களையும் அவர் காயப்படுத்தி விட்டார்.

எனவே, இஸ்லாம் மதத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ரெஹானாவையும் அவரது மஹால்லாவில் (ஒரு பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய சமூகம்) குடும்பத்தாரையும் தள்ளிவைக்குமாறு எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாஅத்-ஐ அறிவுறுத்தி இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் பெயரை பயன்படுத்தும் உரிமையும், முஸ்லிம் ஜமாஅத்துடன் இனி எந்தவொரு தொடர்பும் அவருக்கு கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு பிறமதத்தினரின் உணர்வுகளை காயப்படுத்தியதற்காக சட்டப்பிரிவு 153-ஏ-வின்கீழ் அவர் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

-athirvu.in

TAGS: