தீபாவளியில் நல்ல செய்தி: 62 நக்சல்கள் சரண்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் தீபாவளி திருநாளில் 62 மாவோயிஸ்ட் நக்சல்கள் போலீசார் முன்பு சரண் அடைந்தனர். அவர்கள் வைத்திருந்த பல்வேறு ஆயுதங்களையும் ஒப்படைத்தனர்.

கடந்த ஆண்டுகளை விட ஒப்பிடுகையில் சட்டீஸ்கரில் நக்சல் தாக்குதல் வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் நக்சல் ஒழிப்பு பணியில் மத்திய துணை பாதுகாப்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

வரவேற்கத்தக்கது

இன்று சட்டீஸ்கர் நாராயண்பூரில் 62 நக்சல்கள் , பஸ்தார் ஐ.ஜி., விவேகானந்தா சின்கா, நாராயண்பூர் எஸ்.பி., ஜிதேந்திர சுக்லா ஆகியோர் முன்பு சரண் அடைந்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்தி வந்த 51 நாட்டு துப்பாக்கிகளையும் ஒப்படைத்தனர். ” இது போன்ற விஷயம் வரவேற்கத்தக்கது. இன்னும் பலர் சரண் அடைவார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார் எஸ்.பி., ஜிதேந்திர சுக்லா .

-dinamalar.com

TAGS: