இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் 2 ஆயிரத்து 32

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 32 பேராக அதிகரித்துள்ளது. 58 பேர் பலியாகி உள்ளனர்.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 12 மணி நேரத்தில் 131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1965 ஆக அதிகரித்துள்ளது. 151 பேர் குணமடைந்துள்ளனர். 58 பேர் உயிரிழந்துள்ளனர். எஞ்சிய 1764 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

dinamalar