கொரோனா: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேர் பலி

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,447 ஆக அதிகரித்துள்ளது. 239 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் உயிரிழந்துள்ளனர். 1035 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7.447 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக
மஹாராஷ்டிரா- 1574
தமிழகம்- 911
டில்லி – 903
ராஜஸ்தான் – 553
தெலுங்கானா – 473
கேரளா – 364
ஆந்திரா – 363
கர்நாடகா – 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 516 பேர் குணமடைந்த நிலையில், 239 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1035 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

dinamalar