வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகள்- நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

வேளாண் சட்டத்தால் சந்தை, உட்கட்டமைப்பு வரி, இடைத்தரகர் வரி என சுமார் 8.5 சதவீத வரியை செலுத்துவதில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரான் கூறுகையில் ‘‘வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம். வேளாண் சட்டத்தால் சந்தை, உட்கட்டமைப்பு வரி, இடைத்தரகர் வரி என சுமார் 8.5 சதவீத வரியை செலுத்துவதில் இருந்து விவசாயிகளுக்கு விடுதலை கிடைக்கும்

வேளாண் சட்டத்தால் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து விவசாயிகளே முடிவு செய்வர். மத்திய அரசு பட்டியலில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயான வேளாண் வர்த்தகத்தை மட்டுமே மாற்றியுள்ளோம். வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது ஒரு சீர்திருத்த முயற்சியே. வேளாண் சட்டத்தில் எந்தவித குழப்பமும் இல்லை – நிர்மலா சீதாராமன். ஆதாயம் கிடைக்கக் கூடிய வகையில் எங்கு வேண்டுமானாலும் விளை பொருட்களை விற்கலாம்’’ என்றார்

malaimalar