அரசு பஸ்களில் மகளிருக்கு டிக்கெட்

சென்னை–அரசு பஸ்களில் பயணிக்கும் மகளிருக்கு, நேற்று முதல் ‘டிக்கெட்’டுகள் வழங்கப்பட்டன.

அரசு பஸ்களில், மகளிர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் உள்ளிட்டோருக்கு, இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுஉள்ளது. இதில், மகளிருக்கான இலவச பயணத்துக்காக, ஆண்டுக்கு, 120 கோடி ரூபாய், அரசால் மானியமாக வழங்கப்பட உள்ளது. மற்ற வகையினருக்கு, இலவச பயணத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

அவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில், அரசிடம் கட்டணம் வசூலிக்க, இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று முதல் மகளிருக்கும் இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. இதுவும், கணக்கெடுப்புக்காக வழங்கப்பட்டதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

dinamalar