திருவண்ணாமலை கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

பரணி தீபம்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களுள் அக்னி தலமாக இது விளங்குகிறது.

இங்குள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தீப கொப்பரைக்கு திறப்பு பூஜை நடத்தப்பட்டு 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

maalaimalar