இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிப்பு

இங்கிலாந்து நாட்டில் முதன் முறையாக ஒமைக்ரான் எக்ஸ்இ  என்ற வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஒமைக்ரான் எக்ஸ்இ  வகை வைரஸ் 10 மடங்கு வேகமாக பரவக்கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரசின் மாறுபாடமைந்த எக்ஸ் இ என்ற வைரஸ் தொற்று மும்பையில் ஒருவருக்கு இன்று கண்டறியப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஒமைக்ரான் வைரசின் மாறுபாடடைந்த தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Malaimalar