உக்ரேன் போரைக் குறைகூறியதாக நம்பப்படும் ரஷ்யச் செல்வந்தர் இந்தியாவில் திடீர் மரணம்

ரஷ்யச் செல்வந்தரும் அரசியல்வாதியுமான 65 வயது பாவல் அன்டோவின் திடீர் மரணம் குறித்து இந்தியக் காவல்துறை விசாரணை நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒடிஷா மாநிலத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு வெளியே அவரின் உடல் ரத்த வெள்ளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் ஹோட்டலின் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அவர் ரஷ்யாவைச் சேர்ந்த மேலும் 3 பேருடன் விடுமுறைக்கு அங்குச் சென்றிருந்தார். இரு நாள்களுக்கு முன்பு தான் அவருடன் சென்றிருந்த விளாடிமிர் பிடெனோவ் அதே விடுதியில் சுயநினைவின்றிக் காணப்பட்டார்.

அவர் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களின் மரணத்தில் சூது இருப்பதற்கான அறிகுறி ஏதும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது.

சென்ற ஜூன் மாதம் அவர் உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைக் குறைகூறியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அன்டோவ் அதை நிராகரித்தார்.

 

-smc