இலங்கைக்கு செல்கிறது அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு

இலங்கையில் போருக்கு பின் தமிழர்களின் நிலையை நேரில் கண்டறிய இந்திய அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த குழு இலங்கை செல்ல இருந்தது. ஆனால் 5 மாநில தேர்தல் காரணமாக இந்த பயணம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், 5 மாநில தேர்தல் முடிந்து விட்டதால், அடுத்த மாதம் (ஏப்ரல்) நாடாளுமன்ற உறுப்பினர் குழு இலங்கை பயணத்தை மேற்கொள்கிறார்கள்.

இலங்கை செல்லும் இக்குழுவுக்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்கி செல்லவுள்ளதாகவும் இந்த குழுவினர் அடுத்த மாதம் 16ஆம் தேதி புறப்பட்டுச் சென்று 21ஆம் தேதி நாடு திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடைபெற்று இருக்கும் நிவாரண பணிகளை இக்குழு பார்வையிடுகிறார்கள். மேலும், தமிழர்களின் வாழ்க்கை நிலையையும் நேரில் பார்வையிடுவார்கள் என தெரியவருகிறது.

TAGS: