தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு : இலங்கை கடற்படை அட்டூழியம்

இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலில் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், படகில் ஏற்பட்ட பழுதை சரி செய்து ‌கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, 13 மீனவர்களை சிறைபி‌டித்து இலங்கை அழைத்துச் சென்றது. இதில் 3 பேர் மீது போதை கடத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் மற்றும் சிறைபிடிப்பு நடத்திவரும் சம்பவங்களால் மீனவர்களிடையே பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TAGS: