கடைசி வரிசையில் போராட கருணாநிதி தயார்

“சென்னை மாநகராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

“சிறைநிரப்பும் போராட்டத்தில், நானும் கலந்து கொள்ள எனக்கு பேரவா தான். ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கூட, மற்றவர்களைக் கலந்து கொள்ளச் செய்து விட்டு, ஒதுங்கியிருந்து, ஓய்வெடுத்துப் பழக்கப்பட்டவன் நானல்ல”  தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறினார்.

“ஒவ்வொரு போராட்டத்திலும் நான் கலந்து கொண்டு, நான் வழியனுப்பப்பட்டிருக்கிறனே தவிர, வழியனுப்புவோனாக என்றைக்கும் இருந்தது இல்லை.சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்பவனாக நான் அறிவிக்கப்படா விட்டாலும், தாம்பரம் கூட்டத்தில் நான் கூறியதைப் போல இந்த வரிசையில் நின்று, அது தடைப்பட்டால் அடுத்த வரிசை, அந்த வரிசையும் தடைப்பட்டால் கடைசி வரிசை, அந்த வரிசையிலே கருணாநிதியும் இருப்பான். முதல் வரிசையில் சிறையில் நான் இல்லாவிட்டாலும், என்னுடைய உள்ளமும், உணர்வும் சிறைக்குள்ளே சிறகடித்து உலவிக் கொண்டேயிருக்கும்” என கருணாநிதி மேலும் கூறினார்.

TAGS: