சிவகாசியில் பயங்கரம் வெடி விபத்தில் 34 பேர் பலி

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில்  34 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60 பேர் படுகாயங்களுடன், விருதுநகர், சிவகாசி, மதுரை மருத்துவமனைகளில் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நேற்று மதியம் 12 மணி அளவில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்தது. இதில் அருகில் இருந்த அனைத்து அறைகளுக்கும் தீ பரவியது. அதில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடிக்க தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக மாறியது. இதில் அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பெரும்பாலான பகுதிகளில் பரவி உள்ளதால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த அறைகள் வெடித்து சிதறியதாலும் தீ ஜுவாலையினாலும் அருகே நெருங்க முடியவில்லை. ஆனாலும் கடும் சிரமத்துடன் அவர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் பற்றி எரிந்த தீயை வேடிக்கை பார்க்க வந்த 50-க்கும் மேற்பட்டோர் பட்டாசு புகையால் மயக்கம் அடைந்தனர். அவர்களை தீயணைக்கும் படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொழிற்சாலையின் ஒரு அறையில் உடல் கருகிய நிலையில் கிடந்த 6 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தொடர்ந்து உள்ளே வெடி சத்தம் கேட்டுக்கொண்டு இருப்பதால் வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. இந்த விபத்தில் 54 பேர் பலியாகினர். 60 பேர் காயம் அடைந்துள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது. சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

TAGS: