காந்திதேசத்தில் கால்வைக்க ராஜபக்சே அருகதையற்றவன்: வைகோ காட்டம்

ஈவு இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளையும், தாய்மார்களையும், யுத்த களத்தில் ஆயுதம் ஏந்தாத நிராயுத பாணிகளையும் தனது முப்படைகளை ஏவி கொன்று குவித்த கொடியவனாக ராஜபக்ச, அசோகச் சக்கரவர்த்தி கட்டியெழுப்பிய புத்த விகாரைக்குள் அடியெடுத்து வைக்க அணு அளவும் அருகதை அற்றவர் என்று வைகோ காட்டமாக தெரிவித்துள்ளார்.

சாஞ்சியில் புத்த மத கல்விமைய விழாவுக்கு இந்தியா வருகை தரும் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக திட்டமிட்டபடி எதிர்ப்புப் போராட்டம் தடைகளை மீறி நடைபெறும் என வழக்கறிஞருமான வைகோ அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

“மத்தியப் பிரதேச மாநிலத்தில், விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21 ம் தேதி நடைபெற இருக்கும் புத்தமத கல்வி மையத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில், பங்கேற்க வருகின்ற சிங்கள அதிபர் ராஜபக்ச லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை படுகொலை செய்தவர். அதனால் சாஞ்சிக்கு வர இருக்கும் ராஜபக்சவுக்கு எதிராக கறுப்புக் கொடி அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது.

இது குறித்து மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகானுக்கு விளக்கமாக கடிதம் எழுதி, அதில் ராஜபக்ச வருகையை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சொன்னார்.

TAGS: