தொடர் முற்றுகைப் போராட்டம்:சென்னை அமெரிக்க தூதரகம் திடீர் மூடல்

சென்னை: நபிகள் நாயகம் பற்றிய திரைப்பட சர்ச்சையால் தொடர் முற்றுகைப் போராட்டங்களை எதிர்கொண்டிருக்கிறது சென்னை அமெரிக்க தூதரகம். இன்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படக் கூடும் என்பதால் அமெரிக்க தூதரகத்துக்கு 2 நாள் திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து அமெரிக்கர் ஒருவர் எடுத்த சர்ச்சைக்குரிய திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. இதில் சென்னையும் விதிவிலக்கு அல்ல. சென்னை அமெரிக்க தூதரகம் மீது 3 நாட்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு 3 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரின் தடையையும் மீறி 2-வது நாளாக நேற்றும் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்பட்டது.

TAGS: