பிரிவினைவாதிகளை ஒடுக்கிய இந்திய இராணுவ அதிகாரிக்கு லண்டனில் கத்தி குத்து!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் பொற்கோவிலில், சீக்கிய பிரிவினைவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கி ஈடுபட்ட முன்னாள் இராணுவத் தளபதி கே.எஸ்.பிரார், லண்டனில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்தார்.

பிரிவினைவாதிகளை ஒடுக்குவதற்காக, அமிர்தசரஸ் பொற்கோவிலில், 1984ம் ஆண்டு, “ஆபரேஷன் ப்ளு ஸ்டார்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கையில், லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிராரும் ஈடுபட்டிருந்தார்.

தற்போது ஓய்வு பெற்று விட்ட பிரார், தெற்கு மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் தன் மனைவியுடன் லண்டன் சென்றிருந்தார். லண்டன் ஓட்டலில் இருந்து, நேற்று வெளியே வந்த அவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்தினார். இதில்  படுகாயமடைந்த பிரார், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவிக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.

TAGS: