ஏமாறுவோர் இருந்தால் ஏமாற்றுவோரும் இருப்பர்: கருணாநிதி

சென்னை: “கடந்த ஆண்டு நவம்பரில், பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழக முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்” என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

“பசும்போன் தேவர் விழாவை ஒட்டி, முன் எச்சரிக்கையாக இல்லாதது, அரசுத் துறை அலட்சியம், இவற்றின் காரணமாக, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் பஸ் கட்டணத்தை உயர்த்திய முதல்வர், தற்போது மக்கள் அதை மறந்திருப்பர் என்ற எண்ணத்தோடு, பஸ் கட்டணத்தை உயர்த்தப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.”

“ஏமாறுவோர் இருந்தால், ஏமாற்றுவோர் இருக்கத்தானே செய்வர். தமிழகத்தில், மின்வெட்டு நிலைமையை, மூன்றே மாதங்களில் சீர் செய்வேன் என, முதல்வர் வாக்குறுதி கொடுத்ததற்கான ஆதாரங்களை நிரூபித்தால், முதல்வர், அரசியலில் இருந்து விலகத் தயாரா என, ராமதாஸ் கேட்டிருக்கிறார். நான் அவ்வாறு, கடினமாகக் கேட்க விரும்பவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

TAGS: