மதுரைக்குள் நுழைய சாதிவெறியர் ராமதாஸுக்கு தடை

ramadossபாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 21ஆம் தேதிவரை மதுரை மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என அம்மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்திருக்கிறார். சமூக நல்லிணக்கத்தைப் பேணும் பொருட்டு இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் இப்படியான ஒரு தடையாணை உத்திரவினைப் பிறப்பித்தது.

புதிதாக அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை என்ற ஓர் அமைப்பினை உருவாக்கி, அதில் பல்வேறு சாதி அமைப்புக்களை ஒருங்கிணைத்து தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும், பிற சாதிப் பெண்களை தலித் இளைஞர்கள் ஏமாற்றித் திருமணம் செய்துகொள்வதைத் தடுக்கவேண்டும் என்பன போன்ற சர்ச்சைக்குரிய கோரிக்கைகளுக்கு ராமதாஸ் ஆதரவு திரட்டிவருகிறார்.

மதுரையில் கடந்த டிசம்பர் 21ஆம் நாள் கூடிய இந்த பேரவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியருக்கு அளிக்கப்பட்ட மனுக்களை விசாரித்து அதன்பேரில் தற்போதைய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

TAGS: