கறையான் போல் நாட்டை அரிக்கிறது காங்கிரஸ்; மோடி ஆவேசம்

narendra modiகாங்கிரஸ் கட்சி, கமிஷன் ஆட்சி நடத்துகிறது. தொடர்ச்சியான ஊழல்களால் கறையான் போல் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கிறது. பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங், சோனியா குடும்பத்தின் இரவு காவலாளி போல் செயல்படுகிறார் என பா.ஜ., மூத்த தலைவர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.

பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும் குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பதற்கு பா.ஜ., மேலிடம் தயாராகி வரும் நிலையில் இந்த கூட்டத்தில் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் அவர்.

குஜராத்தில், சிறந்த நிர்வாகத்தை ஏற்படுத்தியது எப்படி என்ற தலைப்பில் பேச அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியையும் மத்திய அரசையும் சரமாரியாக தாக்கி பேசி அங்கு கூடியிருந்த பா.ஜ., நிர்வாகிகளின் கைதட்டல்களையும் பாராட்டுகளையும் பெற்றார்.

TAGS: