இந்திய மத்திய அரசில் இருந்து திமுக விலகல்; கருணாநிதி அறிவிப்பு

karunanithiசென்னை: இலங்கை விவகாரத்தில் இந்திய மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையைப் பார்ப்பதால் மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக உடனடியாக விலகிக்கொள்வதாக திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

மேலும் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர், இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பாக திமுகவின் கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை.

நேற்று 3 மத்திய அமைச்சர்கள் வந்து போனதுக்குப் பின் மத்திய அரசிடமிருந்து யாரும் எங்களுடன் பேசவில்லை. இலங்கை பிரச்னையில் இந்திய மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து நாங்கள் விலகுகிறோம்.

இந்திய மத்திய அரசு கூடவே இருந்து குழி பறிக்கும் வேலையை பார்க்கிறது. இன்று அல்லது நாளை திமுக மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்குவர் என்றார்.

TAGS: