இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு தமிழகத்தில் பிரசாரம்

boycott_srilankaதமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.

ஆனால், மத்திய அரசோ இதை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில்; இலங்கைப் பொருட்களை தமிழகத்தில் பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழர் பண்பாட்டு நடுவம் முன்னெடுத்துள்ளது.

தமிழகத்தில் பல கடைகளில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்கட், பழங்கங்கள், இறைச்சி, பருத்தி ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன அவற்றை புறக்கணிக்கவேண்டும் என்றும் நடுவம் கோரியுள்ளது.

TAGS: