தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட்

vijayakanthஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிடிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகாததால் நெல்லை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்றைய தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது விஜயகாந்த் ஆஜராகவில்லை. இதனால் நெல்லை 3வது நீதிமன்றத்தின் அடிசனல் செசன்ஸ் நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை வரும் 05.05.2013க்கு ஒத்திவைத்தார்.

பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, விஜயகாந்த் தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

நெல்லையில் கடந்த 2012ல் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது.

TAGS: