காணிகளை இழந்த மக்களின் அவல வாழ்க்கை தொடர்வதற்கு இனியும் இடமளிக்கக்கூடாது!

வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் நிலவிய யுத்த சூழ்நிலையின் போது பொதுமக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அவை இதுவரை முழுமையாக உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் அப்பாவிப் பொதுமக்களின் காணிகளை மீள்வழங்குமாறு வலியுறுத்தப்பட்டு வந்த போதும்…

நல்லிணக்கத்தை அடைய இலங்கை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது! அமெரிக்கா

நல்லிணக்கம் மற்றும் நீதி என்பவற்றுக்காக இலங்கை இன்னும் அதிக பணிகளை மேற்கொள்ளவேண்டியுள்ளது என்று அமெரிக்காவின் தெற்காசியாவுக்கான பிரதி ராஜாங்க செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கையால் இந்த பணிகளை தனித்து நிறைவேற்றமுடியாது. எனவே அமெரிக்க நண்பனாகவும் பங்களாராகவும் இலங்கைக்கு உதவும் என்று ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி…

இறுதி யுத்தத்தில் கணிசமானளவு பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது உண்மை! பரணகம

இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட மக்கள் தொடர்பான எண்ணிக்கையை சரியாக கூற முடியாததால் எண்ணிகையை என்னால் வெளியிட முடியாது. ஆனாலும் கணிசமான அளவு பொது மக்கள் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டார்கள் என்பது மட்டும் உண்மை என ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இறுதி யுத்தம்…

தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி ஆட்சிக்குத் தயார்! தமிழ்த் தேசிய…

நாம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான சமஸ்ட்டி ஆட்சி முறைக்குத் தயாராக உள்ளோம். அச் சமஸ்ட்டி ஆட்சி முறையானது மத்தியில் தேசங்களின் கூட்டும் மாநிலத்தில் சுயாட்சியும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைதல் வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எடுத்துள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள்…

காணிகளை சூறையாட இடமளிக்க முடியாது! அரசை வலியுறுத்தியுள்ள கூட்டமைப்பின் பிரதிநிதிகள்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திகள் என்ற பெயரில் எமது மக்களின் காணிகளை சூறையாடும் நிலைமை தொடருமாயின் அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. எமது மக்கள் இப்போதும் தமது காணிகளை கேட்டு போராடி வருகின்றனர். அதேபோல் மீள்குடியேற்றம் இன்னமும் பூரணமாகாத…

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீட்டை அனுமதிக்கமாட்டோம்! அமைச்சர் சம்பிக்க

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ள சந்தேக குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து எமது இராணுவத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு உள்ளது. ஆனால் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளில் எந்த சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற போரின் போது நடந்த…

தக்க நேரத்தில் பிரபாகரன் திரும்பி வருவார்! பழ.நெடுமாறன் நம்பிக்கை

இலங்கைத் தமிழர் பிரச்சினை தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தமிழர் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி, பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்ற கருத்தை சமீபத்தில் கூறியிருந்தீர்கள், எந்த அடிப்படையில் அப்படி கூறுகிறீர்கள்? எனக்கு வந்த…

மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: இலங்கை தமிழர் பகுதியில்…

இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பண்டாரி குளத்தைச் சேர்ந்த ஹரிஸ்னா என்ற அந்த மாணவி தனத வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த மர்ம மனிதர்கள் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர். தமிழர்கள்…

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்ற பொறுப்பு இல்லாமல் போனது…

திருடன் ஒருவன் திருடும் போது அவனை தேடி கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சட்டங்கள் இந்த நாட்டில் இருக்கின்றது. எனினும், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து வழங்க வேண்டும் என்ற பொறுப்பு அந்த சட்டத்திற்கு இல்லாமல் போனது ஏன் என காணாமல் போனவரின் மனைவி ஒருவர் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள்…

போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்க வாய்ப்பு!

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின் போது நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டவர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் இன்னமும் திறந்த நிலையிலேயே இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வாசிங்டனில் உள்ள அமைதிக்கான அமெரிக்க நிறுவகத்தில் நேற்றுப் பிற்பகல் ஆற்றிய உரையிலேயே அவர்…

இறுதிக்கட்ட யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப்படவில்லை! ஜனாதிபதி ஆணைக்குழு

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரால் சுமார் 40,000 பொதுமக்கள் கொல்லப்பட்டாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு பொய்யென காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களால் தருஸ்மன் அறிக்கையும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளதாக ஆ​ணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஆணைக்குழுவினால்…

சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட வரலாற்றிலிருந்து விடுபடும் ஏதுநிலை நல்லாட்சியில் இல்லை:…

தமிழ் மக்கள் தங்களை அரசியல் அனாதைகளாகவே நினைக்கின்றார்கள். அவர்கள் சிங்கள தலைவர்களால் ஏமாற்றப்பட்ட வரலாற்றிலிருந்து விடுபட கூடியதான ஏது நிலை எதுவும் இந்த நல்லாட்சியில் இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு யாப்பு உருவாக்கம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற…

குழப்ப வேண்டாம்! சகல கட்சிகளிடமும் சம்பந்தன் வேண்டுகோள்

புதிய அரசியலமைப்பின் மூலம் அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு காணப்பட்டுள்ள நிலையில் அப்பணிகளை யாரும் குழப்புவதோ அல்லது காலதாமதப்படுத்துவதோ கூடாதென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அரசியல் கட்சிகளிடத்தில் கோரிக்கை விடுத்தார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றுவது குறித்த பிரேரணை மீது நேற்று புதன்கிழமை…

மாற்றத்துக்கான கருவியாய் பறை ஓங்கி ஒலிக்கட்டும்! ஐங்கரநேசன்

பறை தமிழினத்தின் தொன்மையான அடையாளம். ஆதித் தமிழ்ச்சமூகத்தின் தகவல் தொடர்பு சாதனம். நாடி நரம்பெங்கும் முறுக்கேற்றும் அந்தப்பறை அரசியல் தொடங்கிப் பண்பாடு வரை தமிழ்மக்களின் சகல வாழ்வியற் தளங்களிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாய் மீளவும் ஓங்கி ஒலிக்கட்டும் என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்…

வருட இறுதிக்குள் தீர்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டம்!

மஹிந்தவும் அவரது ஆதரவு அணியினரும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி பெரும்பான்மை மக்களை திசைதிருப்பலாம் என்பதாலேயே தமது இனப்பிரச்சினைத் தீர்வுத் திட்டத்தை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு இன்று பாராளுமன்றில்…

இலங்கை மனித உரிமைகள் மாநாட்டில் மலேசிய எம்.பி! அரச சார்பற்ற…

கொழும்பில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் மலேசியா பட்டு கவான் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு பங்கேற்றமை குறித்து மலேசியாவில் உள்ள இந்தியர்களின் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. கடந்த பெப்ரவரி முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற இந்த மாநாட்டை,…

தனி முஸ்லிம் மாகாணம் வேண்டும்!- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்…

அரசியலமைப்புக்கான புதிய யோசனைகளில் தனியான முஸ்லிம் மாகாண கொள்கையை உள்ளடக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தெரிவித்துள்ளது. காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹசன் அலி இதனை குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கட்சியின் தவிசாளர் பஸீர் சேகு தாவூத் இந்தக்கருத்தை வலியுறுத்தியிருந்தார். இது காங்கிரஸின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது என்றும் ஹசன்…

ஜேர்மன் முறைமை குறித்து பரிசீலிக்க கூட்டமைப்பு தயார்!- சுமந்திரன் பா.உ.

ஜேர்மனியில் சிறந்ததொரு சமஷ்டி அடிப்படையிலான ஆட்சிமுறைமையே காணப்படுகின்றது. அரசாங்கம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அத்தகைய ஆட்சிமுறைமையை ஏற்றுக்கொள்வதற்கு உடன்பட்டால் நாம் அதனை பரிசீலிப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்று எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் தேசிய இனப்பிரச்சினை தீர்வு விவகாரம் தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து…

பாதுகாப்பு தரப்பிடமிருந்து அச்சுறுத்தல் நீடிக்கின்றது; காணாமற்போனோரின் உறவினர்கள் மனோ கணேசனிடம்…

ஆயுத மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் இன்னும் அச்சுறுத்தல்களை எதிர்நோக்குவதாக அரசாங்கத்திடமும், மனித உரிமை அமைப்புகளிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வாளர்கள் என்று கூறிக்கொள்வோரிடமிருந்தே தொலைபேசி மூலமாகவும், இனந்தெரியாத நபர்களிடமிருந்து நேரடியாகவும் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஐம்பது பேர் வரையான பெண்கள் நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான…

சமஷ்டி என்றால் உடனே பிரிந்து செல்வது என்ற அர்த்தம் இல்லை-…

பிரித்தானியாவில் , எப்படி அயர்லாந்தும் ஸ்காட்லாந்து தேசமும் இணைந்து சமஷ்டி முறையில் ஆட்சி நடத்துகிறதோ. அதுபோல ஒரு அலகை இலங்கை தமிழர்களின் தீர்வாக கொண்டுவர இறுதியாக ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் அதி கூடிய உச்ச உரிமைகளோடு வாழ சமஷ்டி முறை ஒரு தீர்வாக அமையலாம். காணி…

ஆளணி வளத்தை இழந்துவரும் மலையக பெருந்தோட்டங்கள்!

மலையக பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதற்கான அளணி வளம் பாரியளவில் இழக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. மலையகப் பெருந்தோட்டங்களில் பணியாற்றுவதனை இளைஞர்கள் பெரிதும் தவிர்த்து வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் 170000 ஹெக்ரயர் பரப்பில் பயிரிடப்பட்ட தேயிலை நிலங்களில் இந்திய வம்சாவளி மக்கள் குடியேற்றப்பட்டிருந்தனர்.…

இவர்களை சிங்கள அரசாங்கத்திடம் கையேந்த விடக் கூடாது!

வெளி நாடுகளில் வாழும் தமிழர்களே எம் உறவுகள் படும் வேதனை யாவரும் அறிந்த உண்மை உங்களால் முடிந்த உதவிகளை எம் உறவுகளுக்கு செய்யுங்கள் நாம் நிம்மதியாக வாழ்வதற்காக தங்கள் அங்கங்களை இழந்தவர்கள் இவர்கள் எம் தலைவன் கட்டுப்பாட்டில் ஈழம் இருக்கும் போது இவர்களுக்கு எந்த குறைகளும் இல்லை இப்போது…

“தகர்ந்து போகும் வாக்குறுதிகளின்” வழியில் நல்லாட்சி அரசாங்கமும் பயணிக்கின்றது

தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு அனைத்தும் தகர்ந்து போய்க் கொண்டிருப்பதாக தமிழ் மக்கள் தற்பொழுது உணரத் தொடங்கி விட்டனர் நல்லாட்சி அரசாங்கம் “தகர்ந்து போகும் வாக்குறுதிகளுடன்” வரவில்லை என்று ஐ.நா. மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தில் பிரகடனப்படுத்தியது மாத்திரமல்ல மனித உரிமை…