இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ஐ.நா செயலாளரை இலங்கைக்கு வருமாறு மங்கள அழைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனை இலங்கை வருமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பான் கீ மூனுக்கும் மங்கள சமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதேவேளை தாம் இலங்கைக்கு வருமாறு அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் அழைப்பு…
தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்ப வேண்டாம்! மைத்திரி…
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இப்போதைய சூழ்நிலையில் திருப்பி அனுப்புவது பொருத்தமானதல்ல என்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள வட்டாரங்களை மேற்கோள்காட்டி, இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அகதிகளை திரும்ப அழைப்பதற்கு இலங்கை…
புலத்து மக்களின் போராட்டத்தை கூர்மைப்படுத்தியுள்ள இனவழிப்பு தீர்மானம்
வடமாகாண சபையில் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை தேவை எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை தமிழின விடுதலைப் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைகின்றது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை தெரிவித்துள்ளது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில், இத் தீர்மானத்தை நிறைவேற்றுவதுக்கு கடினமாக உழைத்தவர்களுக்கு…
முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை!- ஹக்கீம்
முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைத்ததில்லை. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாஸையாகும். மக்களின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக்க தமிழ் பேசும் அரசாங்க பிரதான அதிகாரியொருவரை நியமிக்குமாறு…
வடமாகாண சபையின் இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றம்: பாதிப்பை அளவிட முடியாது…
இலங்கையின் வடமாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட தமிழர் மீதான இனஅழிப்பு பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லிணக்க முயற்சிகளை எந்தளவில் பாதிக்கும் என்பதை தற்போதைக்கு அளவிடமுடியாது என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்திய அதிகாரிகளை கோடிட்டு தெ ஹிந்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளது. வடமாகாணசபையின் தீர்மானம்…
இனப்படுகொலை குற்றச்சாட்டு! வடமாகாணசபை தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு!
இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறி வட மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டாக்டர் ராஜித சேனாரட்ண பிபிசியிடம் தெரிவித்தார். இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமானத்…
இலங்கைக்கு எதிராக ஆவணப்படம் தயாரிக்க மக்ரே நிதி திரட்டுவதாக குற்றச்சாட்டு
இலங்கைக்கு எதிராக ஆவணப்படமொன்றை தயாரிக்க சனல்4 ஊடகத்தின் இயக்குனர் கலம் மக்ரே நிதி திரட்டி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கலம் மக்ரே இலங்கைக்கு எதிராக மற்றமொரு புதிய ஆவணப்படம் ஒன்றை தயாரிக்க ஆயத்தமாகி வருகின்றார். இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு 10,000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் நிதி திரட்டப்பட்டு வருகின்றது. விசேட…
சேர்.பொன் இராமநாதன் முதல் இரா.சம்பந்தர் வரை
இலங்கையின் வரலாற்றைப் பார்க்கும்போது தமிழ் இனம் தோற்றுப்போன இனமாகவே தெரிகிறது. இந்த நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க விடம் சேர்.பொன் இராமநாதன் தோற்றுப்போனார். இராமநாதன் நினைத்திருந்தால் தமிழர் தாயகம் என் பதை உருவாக்கி இருக்க முடியும். ஆனால் இலங்கைத் திருநாடு என்பது அவரின் பார்வையாக இருக்க, சிங்களத் தலைவர்கள்…
தமிழ்த்தேசியவாதிகளே! எங்கே சென்றீர்கள்!!!
ஒரு தேசத்தின் சுதந்திரவிடுதலைக்காகப்போராடியவர்களும் அந்த சுதந்திரத்தினை எதிர்பார்த்துக்காத்திருந்த எத்தனையோ அப்பாவிகளும் செம்மெழியான தமிழ்மொழியினை அடையாளமாகக்கொண்டு தமிழனாகப்பிறந்தான் என்ற ஒரே ஒரு காரணத்தை தவிர வேறு எந்த பாவமும் செய்யாத எத்தனையோ அப்பாவிகளும் இன்று விடியாத சிறைகளிலே அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் போர் போர் என்று போர் நடைபெற்ற காலத்திலே சந்தேகம் என்ற…
இந்தியாவுடன் சிறப்பான உறவை மேம்படுத்திக் கொள்ள விருப்பம்: ஜனாதிபதி
இந்தியாவுடனான சிறப்பான உறவை பலப்படுத்திக்கொள்ள இலங்கை விருப்பம் கொண்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் அவருக்கு வாழ்த்துக்கூறி அனுப்பிய செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே மைத்திரிபால தமது…
யுத்தக் குற்றச்சாட்டுகள் குறித்து மைத்திரிபால அரசு தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும்…
இலங்கையில் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள யுத்தக்குற்றச்சாட்டுகள் குறித்து மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் தீவிர விசாரணைகளை மேற்கொள்ளும் என கருதவில்லை எனமனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியா பசுவிக்கிற்கான இயக்குநர் பிரட்அடம்ஸ் ஐ.பீ எஸ் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு தலைமை தாங்கிய ஜெனரல்சரத்பொன்சேகா அரசாங்கத்துடன் உள்ளதை விசேடமாக சுட்டிக்காட்டியுள்ள அவர்…
தமிழகத்தில் இருந்து அகதிகளை அழைத்துக் கொள்வதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படவில்லை
இந்தியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பியழைப்பதில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல காரணங்கள் இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள சுமார் ஒரு லட்சம் அகதிகள் முதலில் தமது விருப்பத்தின்பேரிலேயே இலங்கைக்கு வரவேண்டும். அடுத்ததாக அவர்களை இலங்கைக்கு வரவழைப்பதற்கு முன்னர் இலங்கையில் இன்னும்…
எமக்காக போராடியவர்களின் நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
இலங்கைத்தீவில் ஆட்சிமாற்றத்தின் பின் தமிழர் விடுதலை மட்டுமல்ல தமிழர் எதிர்காலமே கேள்விக்குள்ளாக்கப்பட்டுவிட்டது. இலங்கைத்தீவில் மட்டுமல்ல அனைத்துலக மட்டத்திலும் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வழியிலும் காங்கள் நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் ஒரு பகுதியாக வருடாவருடம் திருவிழா போல் ஜெனிவாவில் அரங்கேற்றப்பட்டுவந்த ஐநா மனித உரிமை பேரவையின் அறிக்கை போர்களும் கிடப்பில்…
காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு காலம் நீடிப்பு
காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 15 வரை இந்த காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன் காலமுடிவு 2015 பெப்ரவரி 15 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் ஆணைக்குழு, தமது வழமையான விசாரணைகள் மற்றும் வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கைகளை…
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பிரதமருடன் கூட்டமைப்பு பேச்சு!
அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், மற்றும் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல் தொடர்பில் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை நேற்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு த.தே.கூவின் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன்…
ஐநா விசாரணை அறிக்கை மீதான விவாதம் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பு?
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணை அறிக்கை மீதான விவாதம் ஐநா பேரவையில் மார்ச் மாதம் நடைபெறாது என்றும், அது செப்டம்பர் மாத அமர்வுக்கு ஒத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து ஐ.நா மனித…
இலங்கையில் எமக்கு எவ்வித தடையுமில்லை: சீனாவின் விசேட பிரதிநிதி
இலங்கை அரசாங்கம் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாக சீனாவின் விசேட பிரதிநிதி லியூ ஜியான்சோ தெரிவித்துள்ளார். இலங்கையின் தலைவர்களை சந்தித்த பின்னர் அவர் இந்த கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் புதிய அரசாங்கம், சீனாவின் திட்டங்களை மீளாய்வு செய்து அவற்றை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக அவர்…
ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும் வகையில் அனைத்துலக சமூகம்…
இலங்கையின் புதிய அரசு தாம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும் தமிழ் மக்கள் மீது அதீத அக்கறை கொண்டுவருவதாகவும் சர்வதேச ரீதியாக கூறிக்கொள்ளும் விடயத்தில் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சர்வதேச சுயாதீன விசாரணையை கருத்தில் கொண்டு அனைத்துலக சமூகத்திடம் ஐநா விசாரணைக் குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கும் வகையில் அரசை கோர…
இலங்கையில் திறந்தநிலை ஜனநாயகம்!- அமெரிக்கா மகிழ்ச்சி
இலங்கை அரசாங்கம் திறந்தநிலை ஜனநாயகத்தை உருவாக்கி வருவதாக அமெரிக்கா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், இலங்கை, பர்மா மற்றும் துனீசியா போன்ற நாடுகளின் திறந்த நிலை ஜனநாயகத்துக்காக அமெரிக்கா உதவியளிக்கவுள்ளதாக…
தமிழர் பகுதிகளில் ராணுவம் நீடிக்கும்: இலங்கை அதிபர் உத்தரவு
இலங்கையில், தமிழர் பகுதிகளில் ராணுவத்தின் பாதுகாப்புப் பணி நீடிக்கும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த தமிழர்கள் மத்தியில் இந்த உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்கடிக்கப்பட்டு, சிறீசேனா…
மார்ச் மாத UN அமர்வில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் முன்வைக்கப்பட…
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் மார்ச் மாத அமர்வில் இலங்கைக்கு எதிராக தற்போதைக்கு பிரேரணைகள் எதனையும் முன்வைக்ககூடாது என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்களை மையமாக வைத்தே இந்தியன் எக்ஸ்பிரஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கையின் உறுதியற்ற அரசியல்…
வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளனர்: விக்ரமபாகு கருணாரட்ன
வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதாக புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் டொக்டர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் இராணுவத்தினர் முகாம்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளனர். சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இராணுவத்தினரை ஈடுபடுத்தப்பட போவதில்லை. வடக்கு மக்கள் சுதந்திரமான…
மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை அறிக்கை தயார்: ஜனாதிபதி…
இறுதிகட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த அறிக்கை எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல்…