இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று!அதுவே அவரது பழக்கமான செயற்பாடு!-…
வடமாகாண சபைத் அத்தேர்தலில் இராணுவத்தினர் உதவியுடன் வென்றுவிடலாம் என ஜனாதிபதி எண்ணியிருந்தார். எனினும், அது எதிர்விதமாக அமைந்தது. இதனை அவரால் பொறுக்க முடியவில்லை. சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாகத் தனக்கே பழக்கமான முறையில் நடக்கத் தொடங்கினார். என வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வந்தபோது நான்…
அவசர அவசரமாக அமெரிக்க குழு யாழ்.வருகை!! இரவோடிரவாக சந்திப்பு!!
இலங்கைக்காக அமெரிக்க தூதுவர் உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று திடீரென நேற்று புதனிரவு யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. வருகை தந்திருந்த குழுவினர் உடனடியாகவே வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை சந்தித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. இச்சந்திப்பில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் பங்கெடுத்திருந்ததாக தெரியவருகின்றது. இரவு 8 மணிக்கு…
அமெரிக்காவுக்கு கோட்டாபய கடும் கண்டனம்
மட்டக்களப்பில் கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் உள்நாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வெளியாரின் தலையீடு தேவையில்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மட்டகளப்புக்கான ஒரு நாள் பயணமாக வியாழனன்று வந்த கோட்டாபய, இந்த பகுதியின் சமூக, சமய மற்றும் ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் உட்பட பலர்…
இலங்கையில் இனப்படுகொலை தொடர்கிறது! ஜெனிவாவில் அறிக்கை வெளியீடு
இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை ஜெனிவாவில் இன்று வெளியிடப்பட்டது. அதில், இலங்கையில் போருக்கு பிறகும் இனப்படுகொலை தொடர்கிறது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இலங்கையின் இனப்படுகொலைகளுக்கு இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உறுதுணையாக இருந்ததாகவும், இலங்கையின் கூட்டாளிகளாக செயல்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிரந்தர…
ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாக கலைக்க வேண்டும்: தமிழ் தேசியக் கூட்டமைப்பு…
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவை உடனடியாகக் கலைத்து தன் உண்மையான தோற்றத்தை சர்வதேசத்திற்கு அரசாங்கம் வெளிக்காட்ட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்திருப்பதாக கூறிக்கொண்டு மறுபக்கம் காணாமற்போனவர்களுக்கு அரசாங்கம் மரணச்சான்றிதழ் வழங்குகின்றது. அப்படியென்றால்,…
‘இந்திய மீனவர்களை தொடர்ந்தும் கைது செய்வோம்’ – அமைச்சர் ராஜித
இந்திய இலங்கை மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சு வார்த்தை திகதி அறிவிக்கப்பட்ட பின்னரும் இந்திய மீனவர்கள் சுமார் 500 பேர்வரை இலங்கை கடற்பகுதிக்கு வந்ததாகக் கூறும் இலங்கை மீன் பிடி அமைச்சர் ராஜித சேனரட்ண அவர்கள், அப்படியாக வருபவர்களை தொடர்ந்தும் கைது செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். முதல் நாள்…
இதுவே ஐநாவில் கொண்டுவரும் கடைசி தீர்மானமாக இருக்கட்டும்!- நாடு கடந்த…
இலங்கை அரசு வேண்டுமானால், பிரச்சினை முடிந்துவிட்டது, ஓய்ந்துவிட்டது, தமிழ் மக்கள் நலமாக இருக்கிறார்கள் என்று வெற்றுச் சொற்களால் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் உண்மையில் ராஜபக்ஷே அரசு, தமிழர்களுக்கு விஷத்தைத் தடவி மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது. மேலும் மேலும், தமிழர்களை ரணமாக்கும் விதமாகத்தான் செயல்படுகிறது. சிங்களத் தீவில் தமிழர்கள் படும் அவலத்தை ஊடகங்களும்…
சர்வதேசம் சர்வதேசமென்று செல்வதில் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை! பிரதியமைச்சர் கருணா
சர்வதேசம், சர்வதேசம் என்று செல்வதில் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. எமது பிரச்சினையை எமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வதே சிறந்த முறையாக அமையும் என மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை கொள்கைக் கற்கைகள் நிறுவகம் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் குறித்த…
“மனித உரிமைகள் விஷயத்தில் இலங்கையில் முன்னேற்றம் இல்லை”
இலங்கையில் கடந்த மூன்று மாதங்களில் மனித உரிமை நிலவரங்கள் எந்த வகையிலும் மேம்படவில்லை என்று பிரிட்டனின் வெளியுறவு மற்றும் காமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சகம் தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. திருகோணமலையில் மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுத்த ஒரு நிகழ்வில் அவர்கள் மிரப்பட்டனர். உலகளவில் 27 நாடுகளிலுள்ள மனித…
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்த விசேட அமெரிக்க பிரதிநிதி நியமனம்
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் நோக்கில் அமெரிக்க அரசாங்கம் விசேட பிரதிநிதி ஒருவரை நியமித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தவும், தீர்மானம் நிறைவேற்றவும் சமேலா கே…
ராஜபக்ச கூறுவது பொய்: வடக்கில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும்…
வடக்கு மாகாணத்தில் இராணுவ பிரசன்னம் 12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக பொய்யுரைத்துள்ளதாகவும், வடக்கில் 16 முதல் 19 வரையான படைப் பிரிவுகள் நிலைகொள்ள செய்யப்பட்டுள்ளதாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழையில் நேற்று யாழ் புற்று நோய் வைத்தியசாலையை திறந்து வைத்து உரையாற்றிய…
இராணுவ அதிகாரிகளிடமே எனது கணவரை ஒப்படைத்தேன்!– ஆணைக்குழு முன் அனந்தி…
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவி அனந்தி சசிதரன் சாட்சியமளித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு கிளிநொச்சி மாவட்டத்திற்கான மூன்றாவது நாள் அமர்வினை இன்று திங்களன்று நடத்தியபோது, வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…
இலங்கையில் கஞ்சா செய்கையை அனுமதிக்க சட்டம்: அமைச்சர்
இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மருத்துவ தேவைகளுக்காக மட்டும் அனுமதிக்கும் புதிய சட்டவரைவு தயார் நிலையில் இருப்பதாக பாரம்பரிய மருத்துவ துறைக்கான அமைச்சர் சாலிந்த திசாநாயக்க கூறுகிறார். தேசிய பாரம்பரிய மருத்துவர்கள் அல்லது ஆயுர்வேத மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டும் மருத்துவ தேவைகளுக்காக கஞ்சா செடி வளர்ப்பதற்கு இந்த புதிய…
பிரபாகரனின் முடிக்கு இருக்கும் பெறுமதி கூட மகிந்தவுக்கு இல்லை: சரத்…
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்குகூட பெறுமதியற்றவர் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பலப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு…
பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு போகவேண்டிய தேவையில்லை!
உள்நாட்டின் பிரச்சினைகள் உள்நாட்டிலே தீர்க்கப்பட்டிருந்தால் ஜெனீவாவிற்கு எங்கள் பிரச்சினைகள் போகவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது. எமது பிரச்சினை 60 வருடங்களைக் கடந்து நகர்ந்திருக்கின்றத என வடமாகாண சபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.முகாமையாளர் சம்மேளனத்தினால் வடமாகாண சபைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பரஸ்பர ஒத்துழைப்பை ஏற்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று…
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவோம்: சீன தூதுவர்
ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் எந்த தயங்கமும் இன்றி, இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் ஜீ ஹெங் ஹோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் இலங்கை…
நவி.பிள்ளையின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும்: பிரித்தானியா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை குறித்து கவனம் செலுத்தப்படும் என பிரித்தனியா அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில், ஆணையாளர் நவனீதம்பிள்ளை, இலங்கை குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளார். இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை நிலைமைகளை…
அனந்தி கைதானாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ அரசாங்கம் பின்விளைவுகளை சந்திக்கும்!- சுரேஷ் எம்.பி
வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் கைதுசெய்யப்பட்டாலோ, புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டாலோ இலங்கை அரசாங்கம் மோசமான பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்…
வன்னி இறுதிப் போர் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் தவறானவை!– வன்னி…
மன்னார் மாவட்ட கத்தோலிக்க ஆண்டகை இராயப்பு யோசப்பின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சனல் 4 நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்களை மறுதலிக்குமுகமான செய்திகளை வெளியிட்டு வரும் இலங்கை அரசு இது தொடர்பான இன்னொரு தகவலை வெளியிட்டுள்ளது. இறுதிப் போரின் போது வன்னிப் பிராந்திய மருத்துவ சேவைகளிற்கான தலைமை அதிகாரியாக இருந்த டாக்டர் வீரகத்திப்பிள்ளை…
மனித உரிமை மாநாட்டில் பங்கேற்க புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம்!- சிங்கள…
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் பங்கேற்பதற்கு தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில மேற்குலக நாடுகள் புலி ஆதரவாளர்கள் உத்தியோகபூர்வமா மாநாட்டில் பங்கேற்பதற்கு அனுமதியளித்துள்ளன. இந்த நடவடிக்கையானது முழுமையாக சட்ட விரோதமானது. வெளிவிவகார…
இறுதிப்போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை என்பதை கணக்கெடுப்பு உறுதிப்படுத்தும்!-…
வடக்கு கிழக்கில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் பிழை…
அமெரிக்கா- இலங்கைக்கு இடையில் பனிப் போர்: ஜெனீவாவில் யோசனை நிறைவேறுவது…
ஜெனீவா மனித உரிமை பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 28ம் திகதி அமெரிக்கா, இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் யோசனை கட்டாயமாக வெற்றிபெறும் என தெரியவருகிறது. அமெரிக்காவின் யோசனை தொடர்பான வாக்கெடுப்பு மனித உரிமை பேரவையில் 28ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், 29ம் திகதி இலங்கையில் மேல் மற்றும்…
இலங்கையில் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டேன்!- ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் பிறந்த கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் (வயது 32) இலங்கையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களினால் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டதாக கனேடிய ஸ்டார் பத்திரிகைக்கு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். முதலாவது மோட்டார் வண்டி ஓட்டுநரை தினசரி கூலி அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.…