இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
காணாமல்போனோரின் உறவுகளை நிசா சந்தித்தார்! அனந்தி சசிதரனுடனும் இரகசிய பேச்சு!…
யாழ்.குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவி இராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால் போரின் நிறைவில் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்து பேசியுள்ளார். காலை 11மணி தொடக்கம் 12 மணிவரையில் மேற்படிச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச்…
நிஷா – தமிழ் கூட்டமைப்பினர் சந்திப்பு! சர்வதேச விசாரணையே அவசியம்!…
இறுதிப்போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் யுத்த குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சுயாதீனம் மிக்கதும் பாரபட்சமற்றதுமான விசாரணையொன்றை அரசாங்கம் நடத்தப் போவதில்லை. எனவே சர்வதேச விசாரணையே இன்றியமையாததாகும் என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஷ்வாலிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.…
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆயத்தம்!
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட உள்நாட்டு வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆயத்தமாகி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நோக்கில் 20க்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் ஜெனீவா பயணம் செய்ய உள்ளனர், சுரேன் சுரேந்திரன், கெரி ஆனந்தசங்கரி,…
விக்னேஸ்வரனை விமர்சிப்பவர்கள் அரசாங்கத்திடமும் கேள்வி கேட்கவேண்டும்: மனோ கணேசன்
சர்வதேச விசாரணை கோரி வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை கண்டிப்பவர்கள், 13ஐயும், 13க்கு மேலதிகமாகவும் வடமாகாண சபைக்கு அதிகாரம் வழங்குவோம் என ஐநா செயலாளர் நாயகத்துக்கு உறுதிமொழி வழங்கிவிட்டு, இன்று அதை அப்பட்டமாக மீறியுள்ள அரசாங்கத்தை நோக்கியும் கேள்வி எழுப்ப வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார். வடமாகாண…
போருக்குப் பின்னர் தமிழர்களை வெல்வதில் அரசாங்கம் தோல்வி
போருக்கு பின்னர் தமிழர்களை வெற்றி கொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதுடன், அதற்குப் பதிலாக தமிழர்களை அரசாங்கம் மேலும் தனிமைப்படுத்தியது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின்…
மன்னார் மனிதப் புதைகுழி பிரதேசம் முன்னர் மயானமாக இருந்ததென காட்ட…
மன்னார் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி இன்று வியாழக்கிழமை 18 வது தடவையாக தோண்டப்பட்ட இதுவரை 55 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்கனவே மயானமொன்று இருந்ததாக காட்ட அரசும் பாதுகாப்பு தரப்பும் முற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மனித எச்சங்கள் மீட்கப்படும் இடங்களிற்கு அருகாக குடியமர்ந்துள்ள குடும்பங்களது வீடுகளிற்கு சென்ற படை…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வை தவிர்த்துக் கொள்வதாக அனந்தி…
தமக்கு ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் காரணமாக எதிர்வரும் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்குச் செல்வதைத் தான் தவிர்த்துக் கொள்வதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் அமர்வு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இதன் போது ஜெனிவாவுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
வடமாகாணசபையின் பிரேரணையை அரசாங்கம் ஏற்காவிடினும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளும்! விக்னேஸ்வரன்
வட மாகாண சபையின் பிரேரணை தொட ர்பில் அரசாங்கம் கவனத்திற் கொள்ளாவிட்டாலும் சர்வதேசம் கவனத்தில் கொள்ளும். சர்வதேச விசாரணைகளே தமிழ் மக்களின் இறுதி நம்பிக்கையாகும் இதனைத் தொடர்ந்தும் சர்வதேசத்திடம் வலியுறுத்துவோம் என்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அரசாங்கம் அன்று செய்ததன் விளைவுகளையே இன்று சர்வதேச அழுத்தங்களின்…
அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக ஜப்பான்!
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் யோசனைக்கு எதிராக குரல் கொடுக்க ஜப்பான் முன்வைத்துள்ளதாக கொழும்பில் உள்ள அந்நாட்டின் தூதரகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்திற்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு, சர்வதேச விசாரணை தேவை என அழுத்தங்கள் கொடுக்கப்பட்டால், இலங்கை அரசாங்கம்,…
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும்!–…
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என உத்தியோகபூர்வமாக அமெரிக்கா அறிவித்துள்ளது,…
அனந்தி எழிலன் – ஒரு பரிசோதனை எலி?
வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி எழிலன் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்வந்த நாளிலிருந்து ஊடகக் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் ஒருவராக விளங்கி வருகின்றார். தமிழ் ஊடகங்களை மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களையும் இவர் தொடர்பான செய்திகள் ஆக்கிரமித்து வருகின்றன. இவர் கூறிய விடயங்கள் செய்திகளாக வெளிவருகின்ற அதேவேளை இவர் கூறாத விடயங்களும்…
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம்! இன்று உணர்வுபூர்வமாக ஆரம்பம்
ஐநா நோக்கிய நீதிக்கான நடைப்பயணம் 29.01.2014 அன்று மதியம் 12 மணிக்கு நெதர்லாண்ட் நாட்டில் டென் ஹாக் நகரில் (Maanweg 174 Den Haag )அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக தியாகி முத்துக்குமார் அவர்களின் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற்…
இலங்கைத் தேயிலை ஏற்றுமதி: உண்மையில் சாதனையா- வேதனையா?
இலங்கை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2013-ம் ஆண்டில் தான் அதிகளவு தேயிலை ஏற்றுமதி நடந்துள்ளதாக பெருந்தோட்ட தொழில்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைத் தேயிலைச் சபையின் புள்ளிவிபரங்களின்படி, கடந்த ஆண்டில் 1.54 பில்லியன் டாலர்கள் அளவுக்கு தேயிலை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது…
சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை முன்வைக்க எதிர்பார்க்கவில்லை: அமெரிக்கா
ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக யோசனை முன்வைத்தாலும் அதில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்க எதிர்பார்க்கவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் யோசனை ஒன்றை கொண்டு எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தை மேற்கோள்காட்டி…
தமிழ் மக்களின் படுகொலையை சர்வதேச விசாரணை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்:…
இலங்கை அரசாங்கம் பூண்டோடு தமிழ் மக்களை கொலை செய்தே போரில் வெற்றி பெற்றது என்பதை சர்வதேச விசாரணையின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை முன்வைத்து மாகாண…
இலங்கைப் போர்க்குற்றங்கள் விசாரணை தேவை : வட மாகாண சபை…
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்றும் இதனை சர்வதேச விசாரணையின் மூலம் அனைத்துலக சமூகம் வெளிப்படுத்த முன்வர வேண்டும் இலங்கையின் வடமாகாண சபை கோரியிருக்கிறது. திங்கட்கிழமை நடந்த இலங்கை வட மாகாண சபைக் கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் ஒன்றை சபை நிறைவேற்றியிருக்கிறது. இலங்கையில் நடைபெற்று முடிந்த படுகொலைகள் மற்றும்…
இம்முறையும் தமிழர்களை ஜெனிவா ஏமாற்றுமா?
இலங்கையின் அமெரிக்க எதிர்ப்பு பிரச்சாரம் ஜெனிவாவில் எடுபடுமா என்பதே இப்போதைய கேள்வி. இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சேர்ந்து கொண்டுவரும் முனைப்பில் உள்ளன. ஆனால் இந்த நியாயமான முனைப்பினை சிங்கள அரசாங்கம் அமெரிக்க எதிர்ப்பாளர்களுக்கான…
கெஜ்ரிவால் – விக்னேஸ்வரன்! அதிகாரத்துக்காக போராடும் இரு முதல்வர்கள்!
கடந்த வாரம் புதுடில்லியை மட்டுமன்றி, இந்தியாவையே அதிரவைத்த ஒரு போராட்டத்தை நடத்தியிருந்தார் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அண்மையில் நடந்த டில்லி சட்டமன் றத் தேர்தலில், வியக்கவைக்கும் வகை யில், இரண்டாவது அதிக ஆசனங்களைப் பிடித்து பிரமிப்பை ஏற்படுத்தியவர் அவர். ஊழலுக்கு எதிரான, அன்னா ஹசாரேயின் போராட்டத்தின் ஊடாக…
பிரபாகரனுடைய அரசியல் திட்டம் என்னவாக இருந்தது?- நேர்காணலில் இரா. சம்பந்தன்…
எம் சுயாட்சி கோரிக்கையை முற்றிலுமாகத் துடைத்து எறிவதே இலங்கை அரசாங்கத்தின் உள்நோக்கம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் தமிழக ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். போருக்குப் பிந்தைய ஐந்தாண்டுகள், கால் நூற்றாண்டுக்குப் பின் நடந்த தேர்தல்… இலங்கையில் தமிழர்கள் நிலைமை எப்படி இருக்கிறது?…
ஐ.நா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் நவனீதம்பிள்ளை அறிக்கை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் அதன் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டிலேயே இலங்கை தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் மனித உரிமைகள் குறித்தே மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது, நவநீதம்பிள்ளை அம்மையார் கடந்த ஆண்டில்…
சர்வதேச சவால்களை எதிர்கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசு பேச…
நாட்டின் தேசிய பிரச்சினையினை தீர்ப்பதற்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ஓர் இணக்கப்பாட்டிற்கு வருமானால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு முழுமையான ஆதரவளிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள பிரேரணையையடுத்து அரசாங்கம் உறுப்பு நாடுகளை சந்தித்து ஆதரவு…
ஐநா பேரவையில் இலங்கைக்கு எதிராக 3வது தீர்மானம் கொண்டு வரவுள்ளதாக…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் வரும் மார்ச் மாதக் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3வது தீர்மானம் ஒன்றை கொண்டு வரவுள்ளதாக, இலங்கை அரசாங்கத்துக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன் இதுபற்றி தமக்குத் தெரியப்படுத்தியதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கொழும்பு ஆங்கில வார இதழ்…
அமெரிக்க தூதுவர் சிசன் யாழில் அனந்தி சசிதரனை சந்தித்து பேச்சு!
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை கைது செய்து புனர்வாழ்வுக்கு அனுப்ப இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கத் தூதுவர் மிச்சேல் ஜே சிசன், அனந்தியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் உள்ள மார்கோசா விடுதியில் கடந்த புதன்கிழமை இரவு இந்தச் சந்திப்பு…