மாற்று உரிமைகோரல்கள் இருந்தபோதிலும், அமைச்சரவை உறுப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பு வலுவாகவே நீடிக்கிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். அமைச்சரவைக்குள் நிலவும் ஒத்துழைப்புதான் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு பங்களித்த காரணிகளில் ஒன்றாகும் என்றும், இது அரசாங்கம் நாட்டின் திசையைத் தீர்மானிக்க உதவியது என்றும் அன்வார் கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.…
ஆளுனரை மிரட்டிய மூசா அமானுக்கு போலீஸ் வலைவீச்சு
சாபா முன்னாள் முதலமைச்சர் மூசா அமான், மாநில ஆளுனர் ஜுஹார் மஹிருடினை மிரட்டினார் என்ற புகார்களின்பேரில் போலீஸ் அவரைத் தேடி வருகிறது. மூசா இருக்குமிடம் தெரியவில்லை என்றும் வாக்குமூலம் பெறுவதற்காக அவரைத் தேடி வருவதாகவும் சாபா போலீஸ் தலைவர் ரம்லி டின் தெரிவித்ததாக ஸ்டார் ஆன்லைன் கூறியது. “இன்னமும் …
1.5 மில்லியன் வங்காள தேச தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான உடன்பாடு மறுபரிசீலனை
பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் உடன்பாடுகளில், 2016-இல் செய்துகொள்ளப்பட்ட மூன்றாண்டுகளில் 1.5மில்லியன் வங்காளதேசத் தொழிலாளர்களைக் கொண்டுவருவதற்கான உடன்பாடும் ஒன்றாகும் என்பதை மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் உறுதிப்படுத்தினார். அந்நியத் தொழிலாளர்களை நம்பியிருக்கும் நிலையைக் குறைக்கும் புதிய அரசாங்கத்தின் கொள்கைக்கேற்ப அவ்வாறு செய்யப்படுவதாக குலசேகரன் கோலாலும்பூரில் கூறினார். “தேவைப்படும் இடங்களில் …
1எம்டிபி தணிக்கை அறிக்கை ஓஎஸ்ஏ-இன்கீழ் வைக்கப்பட்டது ஒரு தற்காலிக நடவடிக்கையே…
முன்னாள் தலைமை கணக்காய்வாளர் அம்ப்ரின் பூவாங், 1எம்டிபி தணிக்கை அறிக்கையை அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின்கீழ் வைத்தது தம் சொந்த முடிவாகும் என்றார். ஆனால், அது ஒரு தற்காலிக நடவடிக்கையே என்றாரவர். பொதுக் கணக்குக்குழு (பிஏசி)வும் 1எம்டிபிமீது ஒரு விசாரணையை நடத்திக்கொண்டிருந்ததால் அதன் விசாரணை முடிந்த பின்னர் தணிக்கை அறிக்கையை …
ஹரப்பான் அமைச்சர்களும் எம்பிகளும் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள்
துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், பக்கத்தான் ஹரப்பான் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பார்கள் என்று கூறினார். “அதுதான் எங்கள் வழி”, என்று மகளிர், குடும்ப மேம்பாட்டு அமைச்சருமான வான் அசிசா முதல்முறையாக அந்த அமைச்சுக்கு வருகை புரிந்தபோது நடந்த செய்தியாளர் …
மசீச : 1 டிரிலியன் கடன் பற்றி விளக்கவும்
துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான புதிய அரசாங்கத்தை, 1 டிரிலியன் நாட்டின் கடன் பற்றி விளக்கமளிக்குமாறு ம.சீ.ச. கேட்டுக்கொண்டது. ம.சீ.ச. மகளிர் தலைவி, ஓங் சொங் ஸ்வேன், மகாதீர் குறிப்பிட்டுள்ள தொகை, பேங்க் நெகாரா அறிவித்த தொகைக்கு முரணாக உள்ளது என இன்று ஓர் அறிக்கையில் கூறியுள்ளார். பக்காத்தான்…
Do we need religion in our education system?
S Thayaparan, May 23, 2018. COMMENT | Academic types have offered a plethora of reforms, but I’m a simple man. “Children must be taught how to think, not what to think.” ― Margaret Mead, cultural anthropologist…
அரசாங்க அமைப்புகளான ஸ்பாட், ஜாசா, ஜேகேகேகேபி, பெமாண்டு, என்பிசி எல்லாம்…
ஐந்து அரசாங்க அமைப்புகள் மற்றும் குழுக்கள் - தேசிய பேராசிரியர்கள் மன்றம் (என்பிசி), பெடரல் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குழுக்கள் (ஜேகேகேகேபி), பிரதமர்துறையின் செயற்படுத்தல் மற்றும் ஒப்படைத்தல் பிரிவு (பெமாண்டு), சிறப்பு விவகாரங்கள் இலாகா (ஜாசா) மற்றும் தரைப் பொதுப் போக்குவரத்து ஆணையம் (ஸ்பாட்) கலைக்கப்பட்டு…
ரந்தாவ் வேட்பாளர் இசிக்கு எதிராக வழக்கு பதிவு
பிகேஆரின் ரந்தாவ் வேட்பாளர் டாக்டர் எஸ்.ஸ்ரீராம், ஏப்ரல் 28-இல் முன்னாள் நெகிரி செம்பிலான் மந்திரி புசார் முகம்மட் ஹசானை வெற்றியாளராக அறிவித்த தேர்தல் ஆணைய(இசி) முடிவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார். முகம்மட், தேர்தல் அதிகாரி அமினோ ஆகோஸ் சுயுப், இசி ஆகியோரை எதிர்வாதிகளாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீராம் தம் …
பெவிலியன் ரெசிடென்சில் கைப்பற்றப்பட்ட பணம் இன்னும் எண்ணி முடிக்கப்படவில்லை
கடந்த வெள்ளிக்கிழமை பெவிலியன் ரெசிடென்ஸ் கொண்டோமினியத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தைக் கணக்கிடும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை என இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் த ஸ்டாரிடம் இன்று தெரிவித்தார். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை (சிசிஐடி) மே 21 அதிகாலையில் …
தியோ பெங் ஹோக் மரணம் மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும், கிட்…
தியோ பெங் ஹோக் மரணமடைந்த சம்பவம் மற்றும் "அநீதிகள்" என்று குற்றம்சாட்டப்படும் இதர மரணங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் மறுபடியும் நடத்தப்பட வேண்டும் என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கருத்து தெரிவித்தார். இவ்வாறு செய்வதன் வழி இந்த ஒன்பது ஆண்டுகால வழக்கிற்கு ஓர் இறுதியான…
கனியும் எம்ஏசிசி-யும் புலன் விசாரணை விவரங்களை வெளியிட்டது முறையா? நஜிப்…
முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனியும் எம்ஏசிசியும் 2015 ஆகஸ்டில் அப்போதைய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக குற்றஞ்சாட்ட முடிவு செய்திருந்ததாகக் கூறியிருப்பதை முன்னாள் பிரதமரின் வழக்குரைஞர்கள் சாடியுள்ளனர். முன்னாள் பிரதமரின் வாக்குமூலம் பதிவு செய்யாமலும் அவர்மீதான விசாரணையை முடிக்காமலும் அவருக்கு எதிராக வழக்கு தொடுப்பது எப்படிச் …
பிரதமர் அலுவலகத்தில் மகாதிர், முதல் அமைச்சரவை கூட்டம் நடத்தினார்
புத்ரா ஜெயா, பெர்டானா புத்ராவில் பிரதமர் மகாதிர் அவரது முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் என்று பெர்னாமா செய்தி கூறிகிறது. இன்று காலை மணி 9.25க்கு தொடங்கிய அமைச்சரவைக் கூட்டத்தில் 13 அமைச்சர்களும் பங்கேற்றனர். அவர்களுடன் அரசாங்கத் தலைமைச் செயலாளர் அலி ஹம்சா மற்றும் அமைச்சரவை துணை…
சுக்ரி : நஜிப்புக்கு எதிராக பேச, மூன்று அமைச்சர்கள் மட்டுமே…
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்எசிசி) தலைமை ஆணையர் முகமட் சுக்ரி அப்துல், நஜிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தோடு, இதற்கு முன்னர் தானும் தனது முன்னாள் தலைவர் அபு காசிம் முகமட்டும் சில அமைச்சர்களை அணுகியதாக தெரிவித்தார். 2015-ல், RM2.6 பில்லியன் நிதி மற்றும் எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல்…
அல்தான்துயா வழக்கு மீண்டும் திறக்கப்படுமா? கலந்துபேச வேண்டும், ஐஜிபி
தலைமை காவல்துறை அதிகாரி, முகமட் ஃபுஜி ஹருன், அல்தான்துயா ஷாரிபூ படுகொலை மீதான விசாரணை ஆவணங்கள் மறுபரிசீலனை செய்யப்படுமா எனக் கேட்டதற்கு, முதலில் தனது அதிகாரிகளுடன் விவாதிக்க வேண்டும் என்றார். "நான் மீண்டும் பார்க்க வேண்டும், என் அதிகாரிகளுடன் கலந்துபேச வேண்டும்" என்று புத்ராஜெயாவில் இன்று செய்தியாளர் மாநாட்டில்…
நிதி அமைச்சர்: 1எம்டிபி கூறியது பொய்! அது கிட்டத்தட்ட ரிம7…
முந்தைய பிஎன் அரசாங்கத்திடமிருந்து 1எம்டிபி கிட்டத்தட்ட ரிம7 பில்லியனை உதவியாகப் பெற்றுள்ளது என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங் இன்று பகிரங்கப்படுத்தினார். அதன் கடன்களைச் சமாளித்துக்கொள்ள முடியும் என்று 1எம்டிபி கூறிவந்ததற்கு முற்றிலும் எதிர்மாறாக இந்த நிலை இருக்கிறது என்றாரவர். பட்டியலின் அடிப்படையில், 1எம்டிபியின் சார்பாக…
குவோக் : மக்கள் ஆலோசனைக் குழு மீது நம்பிக்கை வையுங்கள்
மலேசியத் தொழிலதிபர் ராபர்ட் குவோக், அரசாங்க ஆலோசனைக் குழு (சிஇபி) மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென மக்களைக் கேட்டுக்கொண்டார் “மலேசியாவின் சிறந்த மக்களில் இருந்து, துன் டைம் ஜைனூடின், ஷேட்டி அக்தர் அஜீஸ், ஹாசன் மாரிகான் மற்றும் பேராசிரியர் டாக்டர் ஜோமோ குவாமெ சுந்தரம் ஆகிய சிறப்பான நபர்கள்…
எம்எசிசி: நஜிப் விசாரணைக்காக அழைக்கப்பட்டார், கைது இல்லை
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் எஸ்ஆர்சி இன்டர்நேசனல் பற்றி கேள்விகள் கேட்கப்படுவதற்காக இன்று புத்ரா ஜெயாவுக்கு வரும்படி ஆணையிடப்பட்டார் என்று எம்எசிசியின் தலைமை ஆணையர் முகமட் ஷூகிரி அப்துல் கூறினார். "இன்று, நாங்கள் அவரிடமிருந்து தொடர்ந்து அவரின் வாக்குமூலத்தை 2015 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து எடுத்து வருகிறோம்,…
சிலாங்கூர் புதிய மந்திரி பெசார் இன்னும் சில வாரங்களில் நியமிக்கப்படுவார்,…
சிலாங்கூர் மாநில புதிய மந்திரி பெசார் இன்னும் சில வாரங்களில் நியமிக்கப்படுவார் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி இன்று கூறினார். இது குறித்து நேற்று காலை சிலாங்கூர் அரண்மனை ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. நான் சிலாங்கூர் சுல்தானுக்கு விளக்கம் அளித்துள்ளேன். தாம் மத்திய அமைச்சரவைப்…
ரோப்ர்ட் குவோக் மேன்மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டார்
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற மேன்மக்கள் மன்றத்தின் கூட்டத்தில் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் முதல்முறையாகப் பங்கேற்றார். 94 வயதான குவோக் இன்றையக் கூட்டத்திற்கு தலைமை ஏற்றிருந்தார். அவருடன் அம்மன்றத்தின் தலைவர் டைம் ஸைனுடினும் இருந்தார். அவர்களுடன் அம்மன்றத்தின் இதர உறுப்பினர்களான ஜோமோ கவமே சுந்தரம் மற்றும் பெட்ரோனாஸின் முன்னாள் தலைவர்…
லிங்-க்கு எதிரான வழக்கை நஜிப் திரும்பப் பெற்றுக்கொண்டார்
முன்னாள் மசீச தலைவர் டாக்டர் லிங் லியோங் சிக்-கிற்கு எதிரான தமது அவதூறு வழக்கை முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று திரும்பப் பெற்றுக்கொண்டார். இதற்கான உடன்படிக்கை இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபரிபாலன ஆணையர் டேர்ரில் கூன் முன் செய்யப்பட்டது. மாற்றம் ஏற்பட்டுள்ள இன்றையச் சூழ்நிலையில் கவனிக்கப்பட…
நஜிப்பின் வழக்குரைஞர்கள் விசாரணைக்கு முன்னர் விலகிக் கொண்டனர்
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இன்று மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தால் (எம்எசிசி) விசாரிக்கப்படவிருக்கும் நேரத்தில் அவரது வழக்குரைஞர் ஹர்பால் சிங் கிரிவால், நஜிப்பின் வழக்குரைஞராக செயல்படுவதலிருந்து விலகிக் கொண்டார். நேற்றிரவு நஜிப்பை அவரது தாமான் டூதா இல்லத்தில் சந்தித்தப் பிறகு தாம் நஜிப்பின் வழக்குரைஞராக இருப்பதலிருந்து விலகிக்…
நஜிப் எம்ஏசிசி தலைமையகம் வந்தார்
எஸ்.ஆர்.சி. இண்டர்நேசனல் சென்.பெர். வழக்கு விசாரணையில் சட்சியமளிக்க, முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக், புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) தலைமையகத்திற்கு வந்தார். காலை மணி 9.42 அளவில், போலிஸ் அதிகாரிகளின் கடுமையான கட்டுப்பாட்டுக்கு நடுவே, தொயோத்தா வெல்ஃபையர் வாகனத்தில் நஜிப் அங்கு வந்தார்.…
மகாதிர் உடனான 2-வது சந்திப்பில், அமைதியாக இருந்தபோதும், ஜஸ்டோ மகிழ்ச்சியாக…
இன்று, பிரதமர் துன் டாக்டர் மகாதிர் உடனான தனது இரண்டாவது சந்திப்பு குறித்து, பெட்ரோ சவுடி தகவல் வழங்குநர், சேவியர் ஜஸ்டோ விரிவாக கருத்துரைக்க மறுத்துவிட்டார். எனினும், அந்த சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர், 92 வயது தலைவரைச் சந்தித்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். “எங்கள் சந்திப்பு பற்றி நான் கருத்து தெரிவிக்க…
























