கொலம்பியாவில் 2 ஆயிரம் கர்ப்பிணிகளுக்கு ஜிகா வைரஸ் தாக்குதல்

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய ‘ஜிகா’ வைரசின் தாக்குதலுக்கு தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 2 ஆயிரம் கர்ப்பிணிகள் இலக்காயிருப்பதாக அந்நாட்டு சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபீயன் நாடுகள் உட்பட இதுவரை 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த நாடுகளில்…

95 வருடங்களாக புகைபிடிக்கும் 112 வயது மூதாட்டி: நீண்ட ஆயுளின்…

நேபாள் நாட்டை சேர்ந்த 112 வயதான மூதாட்டி ஒருவர் தொடர்ந்து 95 வருடங்களாக புகைபிடித்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள பெயர் வெளியிடப்படாத கிராமம் ஒன்றில் Batuli Lamichhane என்ற பெயருடைய 112 வயதான மூதாட்டி வசித்து வருகிறார். இவர் கடந்த 1903ம் ஆண்டு…

சவுதி பள்ளிவாயலில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பேர் பலி….18…

சவுதி அரேபியாவின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள அல் அன்ஷாவில் அமைந்துள்ள ஷீயா பள்ளிவாயல் ஒன்றில் தீவிரவாதிகள் புகுந்து துப்பாக்கி பிரயோகம் செய்ததில் குறைந்த பட்சம் 4 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெடிச்சத்தம் ஒன்றுடன் சுமார் ஐந்து ஆயுததாரிகள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியதில் 4 பேர்…

ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்ய வேண்டும்! எதற்காக…

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என்றும், மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எரித்திரிய அரசாங்கத்தின் உயரிய மத அமைப்பான கிராண்ட் மஃப்ட்டி(Grand Mufti) இந்த அதிரடி…

80,000 அகதிகளை உடனடியாக நாடுகடத்த சுவீடன் அரசு முடிவு!

சுவீடன் நாட்டில் 2015ம் ஆண்டில் குடியேறிய அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 80,000 நபர்களை உடனடியாக அவர்களது தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்ப அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 9.8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சுவீடன் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக அதிக எண்ணிக்கையில்…

ஹிட்லர் காலத்துக்கு பிறகு மீண்டும் ஆபத்தை சந்திக்கும் யூதர்கள்

ஜேர்மனியில் அதிகரித்து வரும் அகதிகளின் எண்ணிக்கையால் யூதர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ஜேர்மனியின் தஞ்சமடையும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. மேலும் அகதிகளில் பெரும்பாலானோர் இஸ்லாமிய நாடுகளில் இருந்து வருவதால் ஜேர்மனியில் உள்ள யூதர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அகதிகளாக…

உலகில் அதிக வன்முறை நடைபெறும் நகரங்களின் பட்டியல்: மிக கொடிய…

உலகில் வன்முறைகள் அதிகம் தலைவிரித்தாடும் நகரங்களின் பட்டியலை மெக்சிகோவின் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் நீதியகம் வெளியிட்டுள்ளது. மெக்சிகோவின் பொதுமக்கள் பாதுகாப்பு எனும் அமைப்பு வெளியிட்ட இந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ள் 21 நகரங்கள் பிரேசில் நாட்டில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒட்டுமொத்தமாக 41 நகரங்களில்…

அமைதிப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடக்கம்: ஐ.நா. அறிவிப்பு

சிரியா உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா. மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை தொடங்கும் என ஐ.நா. அறிவித்துள்ளது. இதுகுறிதது சிரியாவுக்கான ஐ.நா. சிறப்பு தூதர் ஸ்டாஃபன் டி மிஸ்டுரா திங்கள்கிழமை கூறியதாவது: சிரியா அமைதிப் பேச்சுவார்த்தையில் எதிர்க்கட்சிகள் சார்பில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் என்பதில்…

ரஷியப் பிரிவினைக்கு அடித்தளம் அமைத்தவர் லெனின்: புதின் காட்டம்

இனவாரியாக மாகாண எல்லைகளை வரையறுத்தன் மூலம், ரஷியப் பிரிவினைக்கு லெனின் அடித்தளம் அமைத்ததாக ரஷிய அதிபர் புதின் கடுமையாகக் குற்றம் சாட்டினார். சோவியத் யூனியன் அமையக் காரணமாக இருந்தவர் லெனின். அவரது கொள்கைகளில் வேறுபாடு கொண்டவராக தற்போதைய ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் இருந்தாலும், லெனின் குறித்த வெளிப்படையான…

சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரி விதிக்கவேண்டும்: உலக…

சர்க்கரை கலந்த பானங்கள் சிறார் உடல்பருமனை அதிகரிப்பதாக எச்சரிக்கை  ஆரோக்கியமற்ற உணவை சந்தைப்படுத்துவதை உலக அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சிறார்கள் மோசமாக குண்டாவதைத் தடுக்க சர்க்கரை கலந்த குடிபானங்கள் மீது அரசுகள் வரிவிதிப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. குழந்தைப் பருவத்தில் உடல்…

கேமரூனில் தற்கொலைப் படை தாக்குதல்: 25 பேர் பலி; பலர்…

டுவலா: கேமரூன் நாட்டின் வடக்கு பகுதியில் தற்கொலைப் படை தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர். கேமரூனின் போடோ நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மத்திய மார்க்கெட் பகுதியில் 2 தற்கொலைப் படை தீவிரவாதிகள் இந்த தாக்குதலில்…

ஏமனில் சவுதிப் படைகள் வான்வழி தாக்குதல்: நீதிபதி – குடும்பத்தார்…

சனா, ஜன.25- ஏமன் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்திப் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சவுதி விமானப்படையின் துணையுடன் அரசுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.…

எண்ணெய் கிணறுகளை தாக்கி அழித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்: 3 மில்லியன் பீப்பாய்கள்…

லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் கிடங்குகள் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. லிபியாவில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் 5 எண்ணெய் கிடங்குகளின் மீது ஐ.எஸ்.தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். எண்ணெய் சேகரித்து வைத்திருக்கும் பகுதிக்கு திடீரென்று புகுந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் அங்கிருந்த பாதுகாப்புப் படையினருடன்…

85 மில்லியன் மக்கள் வீடுகளில் முடக்கம்… 8ஆயிரம் விமானங்கள் ரத்து:…

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி புயல் காரணமாக 17 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். அமெரிக்காவில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் பனி பொழிந்து வருகிறது. ஜொனாஸ்(Janas) என்று பெயரிடப்பட்டுள்ள பனி புயலின் காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போய் உள்ளது் இந்த பனிபுயலுக்கு 17…

பிரான்ஸ் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பை மீறி துறைமுகத்துக்குள் நுழைந்த அகதிகள்

பிரான்ஸ் எல்லையில் வசித்துவரும் அகதிகள் கலேஸ் துறைமுகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் உள்நாட்டு பாதுகாப்பை கருத்தில்கொண்டு அகதிகளுக்கு அந்நாட்டு கட்டுபாடு விதித்துள்ளது. இதன் காரணமாக பிரித்தானியாவுக்கு செல்ல முடியாத அகதிகள் பிரான்ஸின் எல்லையோரத்தில் குடிசைகள் அமைத்து வசித்து வருகின்றனர். மிகவும் மோசமான நிலையில் உள்ள இந்த…

கடும் குளிரை தாங்காமல் உடல் உறைந்து உயிரிழந்த நபர்: அதிகரிக்கும்…

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வீசிய கடும் குளிரை எதிர்க்கொள்ள முடியாமல் உடல் உறைந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரீஸ் நகரில் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் அதிக எண்ணிக்கையிலான வீடற்ற நபர்கள் இரவு பகல் என தங்கி வருகின்றனர்.…

நடுக்கடலில் படகுகள் விபத்து:20 குழந்தைகள் உள்பட 42 பேர் கடலில்…

ஐரோப்பிய நாடுகளில் புகலிடத்திற்காக சட்டவிரோதமாக பயணம் செய்த புலம்பெயர்ந்தவர்களின் படகுகள் விபத்துக்குள்ளானதில் 20 குழந்தைகள் உள்பட 42 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரேக்க நாடு வழியாக பிற ஐரோப்பா நாடுகளில் தஞ்சம் எதிர்பார்த்து சுமார் 100 பேர் அடங்கிய இரண்டு படகுகள் நேற்று நள்ளிரவு…

எகிப்தில் வெடி குண்டு தாக்குதல்: 7 போலீஸார்கள் உட்பட 10…

எகிப்தின் கிசா மாகாணத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 போலீஸார்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டே மறைந்திருந்து பயங்கரவாத குழு இந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக, எகிப்து…

எல் நினோ தாக்கத்தால் 2016 ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாகவே…

பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த 2015ஆம் வருடமே அதிக வெப்பம் பதிவான வருடமாக இருந்ததாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: - 1880 ஆம் ஆண்டில் இருந்து உலகத்தில் பதிவாகும் வெப்பம் குறிக்கப்பட்டு வருகிறது. கடந்த 136 வருடங்களில் கடந்த 2015 ஆம்…

தொடர் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக களையிழந்த பாரீஸ் நகரம்

பிரான்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக அந்நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நாகரீகம் மற்றும் கலாச்சாரம் போன்றவற்றுக்கு புகழ் பெற்ற இடமாக திகழ்ந்து வருகிறது. மேலும் அங்குள்ள ஈஃபில் கோபுரம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய…

ஆப்கானில் ரஷ்ய தூதரகம் அருகே தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்: 7…

ஆப்கான் தலைநகர் காபூலில் ரஷ்ய தூதரகம் அருகே தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த வாரம் நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ள…

பாகிஸ்தானில் பல்கலை.க்குள் புகுந்து தீவிரவாதிகள் சரமாரி தாக்குதல்.. 70 மாணவர்கள்…

பெஷாவர்: பாகிஸ்தானின் பச்சாகான் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தீவிரவாதிகள், மாணவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியும், குண்டு வீசியும் தாக்குதல் நடத்திவருகிறார்கள். இந்த கோர தாக்குதலில் 70 மாணவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. பாகிஸ்தானின் சர்சத்தா நகரிலுள்ளது பச்சாகான் பல்கலைக்கழகம். இன்று காலை பல்கலைக்கழகத்திற்கு ஆசிரியர்கள், மாணவர்கள்…

மனைவியின் மூக்கை அறுத்த கணவர்: ஆப்கானில் தொடரும் பெண்களுக்கு எதிரான…

ஆப்கானிஸ்தானில் மனைவியை மூக்கை அறுத்த கணவரின் செயலுக்கு உலகமுழுவதிலும் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தை சேர்ந்தவர் முகமத் கான். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் 15 வயதேயான ரீஷா குல் என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது.…