லாவோஸ் விமான விபத்து: பாதுகாப்பு அமைச்சர் உட்பட 16 பேர்…

லாவோஸில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பாதுகாப்பு அமைச்சர் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:- லாவோஸ் நாட்டின் ஏ.என்.74-300 ரக ராணுவம் விமானம், வடபகுதியான ஷியாங் குவாங் மாகாணத்தில் விழுந்து நொறுங்கியதில் டெளவாங்சே பிச்சிட் மற்றும் 5 மூத்த அதிகாரிகள்…

துருக்கி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 301 ஆக உயர்வு

 துருக்கி சோமா நகரின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு நிலக்கரிச்சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர் டனீர் யல்டீஸ் கூறும் போது. மீட்பு குழுவினர் கடைசியாக 2 தொழிலாளர்களின் உடல்களை மீட்டனர். மொத்தம் 301 தொழிலாளர்கள்…

உலகின் மிகப்பெரிய டைனசோரின் எச்சங்கள் கண்டுபிடிப்பு

இதுவரை பூமியில் வாழ்ந்தவற்றுள் மிகப்பெரிய உயிரினத்தின் உடல் எச்சங்கள் ஆர்ஜென்ரினாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொன்ம உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த டைனசோரின் தொடை எலும்புகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கணிப்புகளின் பிரகாரம், இது 40 மீற்றர் நீளமானதாகவும், 20 மீற்றர் அகலமானதாகவும் இருந்திருக்குமெனத் தெரிகிறது. பாலைவனப்பகுதியில் வாழ்ந்திருக்க கூடிய இந்த டைனோஸர்…

தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கிய நைஜீரியா கிராம மக்கள்

நைஜீரியாவில் 200 தீவிரவாதிகளை கிராம மக்கள் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் தனிநாடு கேட்டு வரும் ‘போகோ ஹாரம்’ தீவிரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 14ம் திகதி சிபாக் நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றினுள் புகுந்த தீவிரவாதிகள், அங்கு தேர்வு…

துருக்கி சுரங்க விபத்தில் சாவு எண்ணிக்கை 299 ஆக உயர்வு

சோமா, மே 17- துருக்கியின் வடக்கு பகுதியில் உள்ள சோமா நகரில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் வெளியில் வர முடியாமல் தீயில் கருகி இறந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர்…

ஒபாமாவை கொல்ல முயன்றேன்: குற்றவாளிக்கு மரண தண்டனை

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை கொலை செய்வதற்காக 75 வயது மூதாட்டியை கொன்று காரை திருடிய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மீது காரை ஏற்றிக் கொலை செய்ய திட்டமிட்டதாக மேக்வே (44) என்ற நபர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இவரிடம்…

கடத்தப்பட்ட மாணவிகளின் நகரம் செல்லும் நைஜீரிய ஜனாதிபதி

போகோஹராம் தீவிரவாத இயக்கத்தால் பள்ளி மாணவிகள் கடத்தி வைக்கப்பட்ட நகரத்திற்கு நைஜீரிய ஜனாதிபதி இன்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். நைஜீரியாவில் செயல்பட்டுவரும் போகோஹராம் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் கடந்த மாதம் 14ஆம் தேதி போர்னோ மாநிலத்தின் சிபோக் என்ற இடத்தில் உள்ள உறைவிடப் பள்ளியிலிருந்து 276 மாணவிகளைக் கடத்திச் சென்றுள்ளது.…

இந்திய பத்திரிகையாளர்களை வெளியேற்றும் பாகிஸ்தான்

இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்று பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், இந்தியாவை சேர்ந்த ஸ்ரீனிகேஷ் அலெக்ஸ் பிலிபஸ், மற்றும் மீரா மேனான் ஆகிய இருவரும் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு, பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக…

துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி, 200…

துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 201 பேர் பலியாகியுள்ளனர். துருக்கி உள்ள சோமா நகரில் , இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீ தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர். நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து 'ஷிப்ட்' மாறும் போது…

நைஜீரியா: ‘கடத்தப்பட்ட மாணவிகளைக் காட்டும்’ புதிய வீடியோ

நைஜீரியாவில் கடத்தப்பட்ட நூற்றுக்கும் அதிகமான பெண்பிள்ளைகளைக்காட்டும் புதிய வீடியோ ஒன்றை அந்நாட்டின் இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான போக்கோ ஹராம் வெளியிட்டுள்ளது. நான்கு வாரங்களுக்கு முன் கடத்தப்பட்டிருந்த பள்ளிக்கூட மாணவிகள் இவர்கள் என்று நம்பப்படுகிறது. பள்ளிக்கூடத்திலிருந்து காணாமல்போன பெண் பிள்ளைகள் இவர்கள் என்றும், தடுத்துவைக்கப்பட்டுள்ள போக்கோ ஹராம் உறுப்பினர்கள் விடுதலை செய்யப்பட்டால்தான்…

யுக்ரெய்ன்: கிழக்கில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை அதிபர் நிராகரித்துள்ளார்

யுக்ரெய்னின் கிழக்கிலே சில பகுதிகளில் ரஷ்ய ஆதரவுக் குழுக்கள் நடத்தியுள்ள உத்தியோகபூர்வமற்ற கருத்து வாக்கெடுப்பினை 'போலித்தனம்' என்று கூறி யுக்ரெய்ன் இடைக்கால அதிபர் ஒலெக்ஸாந்தர் துர்ச்சினொவ் நிராகரித்துள்ளார். இந்த வாக்கெடுப்பு சட்டப்படி செல்லாது என்று அவர் கூறினார். ஆனால் ரஷ்யாவோ, இந்த கருத்து வாக்கெடுப்பின் முடிவு மதிக்கப்பட வேண்டும்…

கடலுக்கு அடியில் கிளியோபாட்ராவின் அரண்மனை

கடலுக்கு அடியில், 1,600 ஆண்டுகளுக்கு முன் புதையுண்டதாக கருதப்பட்ட கிளியோபாட்ரா வாழ்ந்த அரண்மனை, தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களால், இந்த அரண்மனை புதைந்து விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பலவித சிலைகளும், சிவப்பு கிரானைட் தூண்களும், அரிய பொருட்களும் இதில் அடக்கம். கிளியோபாட்ராவின் மகனின் சிலையும், கடவுள்களின்…

ஐரோப்பாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 40 பேர் பலி

லிபியா கடற்பகுதி வழியாக பயணித்துக் கொண்டிருந்த படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 57 பேர் காப்பாற்றப்பட்டுள்னர். லிபியாவின் தலைநகர் திரிபோலியிலிருந்து 37 மைல் கிழக்கே உள்ள ரமி கால் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகத் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லிபியாவின்…

சுரங்கத்தில் வாடிய தொழிலாளி: 17 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட அதிசயம்

சீனாவில் சுரங்கம் ஒன்றில் சிக்கிய தொழிலாளி சுமார் 17 ஆண்டுகளுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தில் ஏராளமான சுரங்கங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சுரங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டில், இப்பகுதியில் பூகம்பம் ஏற்பட்டதால்…

பாகிஸ்தானில் போலியோ தலைத்தூக்குவதன் காரணங்கள்

பத்து ஆண்டுகளுக்கு முன் போலியோ நோயை நாட்டிலிருந்து முற்றாக ஒழித்து விடக்கூடிய நிலையிலிருந்தது பாகிஸ்தான். ஆனால் போலியோ தடுப்பு என்பது முஸ்லிம்களை மலடாக்கும் சதிவேலை என்று பரப்பப்பட்ட அச்சம், தாலிபான்களின் எழுச்சி, போலியோ தடுப்பு ஊழியர்கள் சுடப்பட்ட சம்பவங்கள் போன்றவற்றின் காரணமாக தற்போது உலகிலே போலியோ வேகமாக அதிகரித்துவரும்…

ரஷியாவுடன் இணைக்கும் முயற்சி: உக்ரைன் கிழக்குப் பகுதியில் 11ஆம் தேதி…

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்துவதற்காக ஸ்லாவ்யான்ஸ்க் நகருக்கு தெற்கே முக்கிய சாலையில் பீரங்கி வாகனங்களுடன் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள். உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தை ரஷியாவுடன் இணைப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை பொது வாக்கெடுப்பு நடத்த பிரிவினைவாதிகள் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொது வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி ரஷிய…

பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நைஜீரிய சிறுமிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்புக்…

நைஜீரியாவில் போகோ ஹராம் முஸ்லிம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 200க்கும் மேற்பட்ட சிறுமிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்க சிறப்புக்குழு துவங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான்கெர்ரி கூறும் போது நைஜீரியாவில் கடந்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்பு குழு நைஜீரிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும்…

சீன விமானப்படைக்கு உதவும் குரங்குகள் பட்டாளம்

விமான தளத்தை பாதுகாப்பதற்காக சீனா விமானப்படை குரங்குகள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது. பறவைகள் மூலம் விமானங்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை கவனித்து கொள்ள குரங்குகள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சீனா விமானப்படை தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குரங்குகள் அருகில் உள்ள மரங்களில் உள்ள கூடுகளை அழிக்க கற்று வருகின்றன. விமான நிலையத்தில்…

பாக்.: மதநிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்காக வாதடிய வழக்குரைஞர் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் மத நிந்தனைக் குற்ற்ச்சாட்டுக்கு உள்ளாகியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிவந்த முன்னணி வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அந்நாட்டின் மனித உரிமைக் குழுக்கள் கண்டித்துள்ளன. ரஷீத் ரஹ்மான் என்ற அந்த சட்டத்தரணி புதன்கிழமை இரவு முல்தான் நகரில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டிருந்தார்.…

அதிகாரத் துஷ்பிரயோகம்: தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு

தாய்லாந்து நாட்டின் பிரதமர் இங்லுக் ஷினாவத் அவர்கள் பதவி விலக அரசியல் சாசன நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, புதிய பிரதமராக நிவ்வத்தம்ராங் போன்சாங்பைசாங் நியமிக்கப்பட்டுள்ளார். இங்லுக் ஷினாவத் பதவியிலிருந்த போது, அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார் என அரசியல் சாசன நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு…

உலக நகரங்களில் மக்களின் உடல நலத்தை கெடுக்கும் அளவுக்கு காற்று…

உலக நகரங்கள் பலவற்றில் மக்களின் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் அளவுக்கு காற்று மாசடைந்துள்ளதாக உலக சுகாதார கழகம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஆசிய நகரங்களில் மிகவும் மோசம் என்று சொல்லும் அளவில் காற்று மாசடைந்துள்ளது. உலகெங்கிலுமாக 91 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து அறுநூறு நகரங்களில் காற்றின் தரத்தை ஆராய்ந்து…

மத சட்டத்தை மீறிய பெண்: 8 பேர் கொண்ட கும்பலால்…

இந்தோனேஷியாவில் முறையற்ற வகையில் 40 வயது திருமணமான ஆணுடன் தொடர்பு வைத்ததற்காக அந்தப்பெண் 5பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் சவுக்கடி வழங்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் வடக்கு மாகாணமான அசேவின் பண்டா அசே நகரில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஒரு விதவை. இவர் 40 வயது நபர்…

கோகோ கோலா பானங்களில் சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்க முடிவு

  கோக்கோ கோலாவின் சில பானங்களிலிருந்து சர்ச்சைக்குரிய தாவர எண்ணெயை நீக்க முடிவு   உலகின் மிக பெரிய குளிர் பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகோ கோலா அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பானங்களில் சுவையைப் நிலைப்படுத்த பயன்படுத்தப்படும்…