13வது திருத்தம் தொடர்பாக இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது: மன்மோகன் சிங்

manmohan13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் அறிந்துள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு நியூயோர்க்கில் இருந்து புதுடெல்லி திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பாக தமது அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக இரண்டு நாடுகளின் இராஜதந்திரிகளுடன் பல சந்தர்ப்பங்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன எனவும் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: