தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல்: ஐதராபாத் பொதுதலைநகர்

manmohan-singhபிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளளது.

தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பகுதியின் பொது தலைநகராக ஐதராபாத் இருக்கும் என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஐதராபாத் நகரம் தலைநகராக இருக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவின் 10 மாவட்டங்களை பிரித்து தனிமாநிலம் அமைக்கப்படுகிறது. நீர் பங்கீடு மற்றும் வருவாய் தொடர்பாக அமைச்சரவை குழு அறிக்கை அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

TAGS: